பக்கம்:நாடகக் கலை 2.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

தந்தையும் வயதானவர்கள்; இருவருக்கும் கண் தெரியாது. நடக்க முடியாத நிலையில் இருந்தார்கள். இளைஞன் மிகவும் நல்லவன். பெற்றவர்களைத் தெய்வமாக எண்ணிப் பேணி வந்தான்.

தாய்தந்தை இருவரையும் இரண்டு கூடைகளில் உட்கார வைத்துத் துணியால் கட்டிக் காவடிபோல் தான் போகுமிடங்களுக்குக்கெல்லாம் தோளிலே சுமந்து கொண்டு போய்ப் பாதுகாத்து வந்தான். பெற்று வளர்த்த தாய் தந்தைக்குப் பணிவிடை செய், வதையே தனது இலட்சியமாகக் கொண்டிருந்தான்.

ஒரு நாள் ஒரு பெரிய காட்டின் வழியே அவன் அவர்களிருந்த காவடியைத் துக்கிக் கொண்டு போகும் போது தந்தைக்குத் தாகம் ஏற்பட்டது. 'மகனே, கொஞ்சம் தண்ணிர் கொண்டு வா' என்ருர் தந்தை. உடனே மகன் அவர்களைக் கீழே இறக்கி வைத்து விட்டு, அப்பா, சமீபத்தில் தண்ணிர் இருக்கிறது, கொண்டு வருகிறேன்' என்று சொல்லிவிட்டு சற்று தூரத்திலிருந்த சுனைக்குப் போய் தண்ணிரை

மொண்டான்.

எங்கிருந்தோ ஒரு அம்பு விரைந்து வந்து அந்த இளைஞன் மார்பில் பாய்ந்தது. இளைஞன் அப்பா, அம்மா’ என்றலறிய வண்ணம் கீழே சாய்ந்தான். அந்த சத்தத்தைக் கேட்டதும் அங்கே ஒரு அரசன் வில்லும் கையுமாக ஓடி வந்தான். அந்த அரசன் பெயா தசரதன். அவன் வேட்டையாட வந்த ஓர் அரசன். இளைஞன் தண்ணிர் மொண்ட சத்தம் கேட்டவுடனே, ஏதோ மிருகம் தண்ணிர் குடிக்கிறது என்று நினைத்துப் புதர் மறைவிலிருந்து பாணத்தை

எய்துவிட்டான். என்ன செய்வது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/148&oldid=1322520" இலிருந்து மீள்விக்கப்பட்டது