பக்கம்:நாடகக் கலை 2.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

நாடகக் கதை கூடக் கற்பனையன்று. சென்னை சிந் தாதிரிப்பேட்டையில் வாழ்ந்து மறைந்த ஒரு தனவந் தரைப் பற்றிய கதை. இந்த நாடகாசிரியராலேயே பிரம்ம சமாஜ நாடகம், தாசில்தார் நாடகம் என்னும் வேறி ரண்டு நாடகங்கள் சமுதாயச் சீர்திருத்த முறையில் எழுதப் பெற்றுள்ளன.

திருமதி. பாலாமணி அம்மையார் அவர்கள் டம்பாச் சாரி நாடகத்தை நடித்தபோது நான் புதுவையில் 1922-ல் பார்த்திருக்கிறேன். காலஞ் சென்ற நகைச் சுவை நடிகர் திரு. சி.எஸ். சாமண்ணா ஐயர் அவர்கள் டம்பாச்சாரி நாடகத்தில் பதினோரு வேடங்கள் தாங்கி அற்புதமாக நடிப்பார். அப்போது நான் சிறுவன் என்றாலும் நன்றாக நினைவிருக்கிறது.

டம்பாச்சாரி நாடகம் எழுதப்பட்ட பிறகு 1877 ல் பிரதாப சந்திர விலாசம் என்னும் ஒரு நாடகம் எழுதப் பெற்றது. இந்த நாடகத்தை எழுதியவர் திரு. ராமசாமி ராஜா என்பவர். இதுவும் டம்பாச்சாரி நாடக அமைப்பைப் பின்பற்றியே எழுதப்பட்டது. இந்த பிரதாப சந்திரன் நாடகத்தை நாங்கள் எங்கள் குழு வில் 1926-ல் பலமுறை நடித்திருக்கிறோம். நானே பிரதாப சந்திரனாகவும், சில நாடகங்களில் விசுவாச காதகன் என்ற தீயோனாகவும் நடித்திருக்கிறேன்.

இந்தக் காலத்தையொட்டி சத்தியபாஷா அரிச்சந்திர விலாசம் என்னும் நாடகத்தை பெங்களூர் திரு. அப்பாவுப் பிள்ளை என்பவர் எழுதியிருக்கிறார். இதுவரை அரிச்சந்திர நாடகத்தில் எந்த நாடக மேடையிலும், தெருக்கூத்து மேடையிலும் இவரது பாடல்களே பாடப்பெற்று வருகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/35&oldid=1540272" இலிருந்து மீள்விக்கப்பட்டது