பக்கம்:நாடகக் கலை 2.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

தொழிலாகக் கொண்ட நாடக சபைகளுக்கு ஒழுங்காக உரையாடல்கள் எழுதிக் கொடுத்து, நாடகப் பேச்சு முறையை வகுத்த பெரியார் தவத்திரு. சங்கரதாஸ் சுவாமிகளே ஆவார்.

பாலர் நாடக சபைகள்

பெரிய நடிகர்களிடம் இந்தக் கட்டுப்பாடு சீர் குலைந்து போகவேதான் சுவாமிகள் பாலர் நாடக சபைகளைத் தோற்றுவிக்க நேர்ந்தது. இவ்வாறு தோன்றிய சபைதான் சமரச சன்மார்க்க நாடக சபை. இந்நாடக சபையை, சங்கரதாஸ் சுவாமிகள் தம் சொந்தத்திலேயே 1910ஆம் ஆண்டில் தொடங்கினார். இச் சபையிலேதான் இசைப் பெரும்புலவர் மதுரை திரு. மாரியப்ப சுவாமிகளும் சங்கீத மேதை திரு. எஸ்.ஜி. கிட்டப்பா அவர்களும் அவருடைய சகோதரர்களும் நடிகர்களாக விளங்கினர்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல நாடக சபைகள் தோன்றின. இவற்றிலெல்லாம் சிறுவர்களே நடிகர்கள். மதுரை பாலமீன ரஞ்சனி சங்கீத சபை, மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, மதுரை தத்துவ மீன லோசனி வித்துவ பாலசபா முதலிய சபைகள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

தமிழ் நாடகக் கலையை வளர்த்த பெருமையில் முக்கிய இடம் பெறக் கூடியவர்கள் பாலர் நாடக சபையினர். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகங்கள் பலவற்றை நான் பார்த்திருக்கிறேன். திரைப்பட நட்சத்திரங்களான திருவாளர்கள். எம்.ஜி.சக்கரபாணி, எம்.ஜி.ராமச்சந்திரன், காளி என். ரத்தினம், பி.யு.சின்னப்பா மற்றும் கே.பி.காமாட்சி, கே.பி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/43&oldid=1540578" இலிருந்து மீள்விக்கப்பட்டது