பக்கம்:நாடகக் கலை 2.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

புரட்சி நாடகத்தைத் தேசபக்தி என்னும் பெயரால் நடத்தினோம். இந்தத் தேசபக்தியும், கதரின் வெற்றியும் தமிழ் நாட்டின் பல நகரங்களில் ஆங்கில சர்க்காரால் அன்று தடை விதிக்கப்பெற்றன. தேசீய போராட்டம் உச்சநிலையில் இருந்த காலம் அது.

அந்நாளில் திருவாளர்கள் எம்.ஜி.நடராஜ பிள்ளை, எஸ். எஸ். விஸ்வநாததாஸ் போன்ற பல நடிகர்கள் நாடக மேடைகளில் தேசீயப் பாடல்களை முழக்கித் தேசபக்திக் கனலை எழுப்பிய சிறப்பையும். இங்கு குறிப்பிட வேண்டும்.

புதுக்கோட்டை திரு. தம்புடு பாகவதர் அவர்களால் துருவன், பக்த ராமதாஸ் என்னும் நாடகங்கள் எழுதப்பெற்றன. மதுரை பால மீன ரஞ்சனி சங்கீத சபையார் இவரது பக்த ராமதாஸ் நாடகத்தை மிக வெற்றிகரமாகச் சென்னையில் நடத்தினார்கள். இந் நாடகத்தில் நவாப் பாத்திரத்தைத் தாங்கிச் சிறப்புற நடித்த திரு.டி.எஸ். இராஜமாணிக்கம் அவர்கள் நவாப் என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்றார்.

நவாப் இராஜமாணிக்கம்

இவருடைய, மதுரை தேவி பால விநோத சங்கீத சபை 1933ல் நிறுவப்பட்டது. இந் நாடக சபையார் திரு.சி.ஏ.ஐயாமுத்து அவர்கள் எழுதிய இன்பசாகரன் என்னும் தேசீய நாடகத்தையும், பிரேமகுமாரி என்னும் பெயரில் பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் துர்க்கேச நந்தனி நாவலையும் நாடகமாக நடித்தனர். 'நவாப்' அவர்கள் திரு.கன்னையா அவர்களின் காட்சியமைப்பு முறைகளைப் பின்பற்றி இராமாயணம், தசாவதாரம், குமார

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/55&oldid=1540604" இலிருந்து மீள்விக்கப்பட்டது