பக்கம்:நாடகக் கலை 2.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

மூர்த்திக்கும் பலத்த சண்டை; நரசிம்மம் இரணியனை மடியில் தூக்கி வைத்துத் தமது கூரிய நகங்களால் மார்பைக் கிழிக்கிறார். சபையோர் உணர்ச்சியோடு இந்தக் கட்டத்தை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்பாராத விதமாகத் திடீரென்று இரணியன் 'ஐயோ கொல்றானே' என்று அலறிய வண்ணம் எழுந்து ஓடத் தொடங்குகிறான். நரசிம்மர் விடாமல் துரத்துகிறார். இப்போது இருவருக்கும் உண்மைப் போர் தொடங்கிவிட்டது. நரசிம்ம வேடதாரியின் தலையை மறைத்திருந்த சிங்கமுகம் எங்கோ போய்விட்டது. ஆனாலும் விடவில்லை அவர். கடைசியாக இரணியன் சபையோரிடம் அடைக்கலம் புகுந்தான். நரசிம்ம நடிகரை நாலுபேர் பிடித்து அடக்க வேண்டிய நிலையேற்பட்டது. விஷயம் என்னவென்று புரிகிறதல்லவா? நரசிம்ம வேடதாரி அதிக உணர்ச்சியுள்ளவர். நடிப்பின் ஆவேசத்தில் தன்னை மறந்தார். இரணியனின் மார்பைக் கிழிக்கத் தொடங்கியதும் வெள்ளியால் செய்யப்பட்ட அவரது கூரிய பொய்- நகங்கள் இரணியனின் மேலங்கியைக் கிழித்துக் கொண்டு உள்ளே போய் மார்பையும் தீண்டிவிட்டன. அவ்வளவுதான் அப்புறம் இரணியன் கதி என்ன ஆவது!

இதைக்கூட நடிப்பின் வெற்றி என்று சொல்லுவார்கள். ஆனால் இது நடிப்பின் தோல்வி; மகத்தான தோல்வி.

நான் முதலில் சொன்ன நாடகக் காட்சியில் நடிகர்கள் தங்களை மறக்கவில்லை. சபையிலிருந்த ரசிகர் தம்மை மறக்கும்படி செய்தார்கள். சிறப்பாக நடித்தார்கள். அது நடிப்பின் வெற்றி. இரண்டாவது நாடகக் காட்சியில் சபையோர் தங்களை மறக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/87&oldid=1550634" இலிருந்து மீள்விக்கப்பட்டது