56 படைவீரர்கள்அணியணியாக காவலனுக்கு கடைசி வணக்கம் செலுத்தியவர்களாக கண்ணிர் வடிய நின்றுகொண்டிருக்கிருர்கள். மீளுட்சி திடீரென பேய் போலச் சிரிக்கிருள். காட்சி எண். 39 கோயில் காஞ்சனமாலை, கிருதமாலை ஆற்றங்கரையில் கெளரியம்மன் முன்னிலையில் கண்ணிரும் கம்பலையு மாக நின்றபடி காஞ்ச : என் விரதத்துக்குப்பலன் இதுவா? என் தவத் திற்கு தண்டனையா? என் மஞ்சள் குங்குமத்தை ஏன் பறித்தாய். பிள்ளைவரம் கேட்ட எனக்கு இல்லை என்றிருந்தால் ஏமாற்றம் மட்டுமே இருந்திருக்கும். இப்போது ஏளனத்திற்கு ஆளாக்கிவிட்டாய். இனி என் மகளுக்குமனமில்லையா? அவள் பெண்மைக்கு அவமானமா? தாயே இது கொடுமை, கொடுமை. அசுவமேத யாகத்தை முடிக்காமலேயே அவருக்கு ஒரு முடிவா? (பின்னல் வந்த மீளுட்சி) மீனு : இல்லை அம்மா இல்லை. (போர்க்கோலத்தோடு நின்றபடி) என் தந்தை அசுவமேத யாகத்தை முடித் திருந்தால் இந்திரலோகத்தை மட்டுமே பிடித்
பக்கம்:நாடகங்கள்.pdf/131
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை