பக்கம்:நாடகங்கள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 புளி எழுத்துக்கும் சொல்லுக்கும்தான் இலக்கணம் பெற்றிருக்கின்றன பிற மொழிகள். இங்கே அகத் துக்கும் புறத்துக்கும் பொருளிலக்கணம் பேசுகிறது தொல்காப்பியம். அரசன்: அவர் பெயர். முனி: அவன் அப்பனிட்ட இடுகுறி பெயர் நமக்.ெ., கு! அவன் ஆக்குகின்ற தொல்காப்பியமே அவரைக்கும் பெயராகும். அரசன்: இந்த அரியபெரிய முயற்சிக்கு நானும் நாடும் கடமைப் பட்டிருக்கிருேம் ஸ்வாமி. முனி: எமக்குத் தொழில் தமிழும், துறவும்தானே! அரசன்: வணக்கம். எங்களுக்கு ஆசிகூறுங்கள், !ாங்கள் விடை பெறுகிருேம். முனி: எங்களைப்பற்றியே பேசிக்கொண்டு இருந்து விட்டேன். உங்களைப்பற்றி . . . அரசன் பிள்ளையில்லே என்பது இவளுக்குப் பெரிய குறை. புனித யாத்திரையாகப் புறப்பட்டோம். முனி: கங்கையும், காவிரியும் கடலும் கடமை கவாத உங்களைத்தேடி வராதா! இங்குள்ள காடுபேடெல்லாம் சுற்றிப் போக வேண்டாம். கடமை உங்களுடையது. கருணை அவனுடையது, ஊருக்குப் போங்கள். (அரசி திடுக்கிட்டு) அரசி : ஸ்வாமி! பாத்திரையை இடை வெளியில் நிறுத்தலாமா? மீளுட்சி-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/97&oldid=781776" இலிருந்து மீள்விக்கப்பட்டது