860 வி. கோ. சூரியாாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்
நற்பொருளிறுதி 11.1. காடகத் தலைவ னன்மணம் புணர்தலு
மாடக மணிமுடி யணிதலு மின்னன
பிறவு மாமிவை திறமுற முடிவது நற்பொரு வரிறுதியா நயந்தனர் புலவர்.
நாடகம் தலைவன் நன்மை மணம் புணர்தலும் - நாடகத்தலைவன் தனக்கேற்ற தலைவியை மணஞ்செய்து கோடலும், ஆடகம் மணி முடி அணிதலும் - பொன்னனும் மணியானும் செய்யப்பட்ட கிரீடத்தைத் தரித் தலும், இன்னன பிறவும்.ஆம் இவை திறம்.உற முடிவது - இவைபோல்வன பிறவுமாகிய அனேத்தையுங் கொண்டு நன்கு முடிவதை, தன்மை பொருள் இறுதியா நயந்தனர் புலவர் - நற்பொருளிறுதி நாடகமெனக் கூறினர் கற்றறிந்தார். -
குறிப்பு:-கலாவதி ருபாவதி முதலிய நாடகங்கள் இவ்விறுதியன வாம். காணுமற்போன மக்களைக் காண்டலும், அளவற்ற செல்வப்பேறு முதலாயினவும் இதன்பாற்படுமாதலான் இன்னன பிறவுமாம் என்ருர். நற்பொருளிறுதி நாடகம்: Comedy. - (க்oக)
தீப்பொருளிறுதி
112. தீப்பொரு வளிறுதி செப்புங் காலே
நாடகத் தலைவ னவிலருங் தீமை யடைத லன்றி யாருயி ரிழத்தலு மறைவதென் றுரைத்தன ராங்கில மொழியோர்.
தீமை பொருள் இறுதி செப்பும் காலே - திப்பொருளிறுதி நாட கம் இன்னதென்பதைக் கூறுமிடத்து, நாடகம் தலைவன் - நாடகத்தின்றலை வன், வில் அருமை தீமை - சொல்லுதற்கும் அச்சத்தைச் தரும்படியாய தீமையினே, அடைதல் அன்றி - அடைவதல்லாமல், அருமை உயிர் இழத்த - லும் - அருமையான உயிரை யிழத்தலும், அறைவது - சொல்லுவதாம், -- என்று உரைத்தனர் ஆங்கிலம் மொழியோர் - என்று ஆங்கில மொழியில் வல்லுநர் கூறினர்கள்.
குறிப்பு:-சொல்லுதற்கும் அச்சத்தைத்தர வல்லதாதலின் வில: ரும் என்றர். தசரதன் தவறு இவ்வகைக்குதாாணமாம். தீப்பொருளிறுதி நாடகம்: Tragedy. இம்முடிபுடைய நாடகங்கள் வடநூலார்க்கு ஒப்ப முடிந்தன வல்லவென்பதும், ஆங்கில நூலார் கொள்கையின்படி தமிழ் மொழியினுந் தழுவிக் கொள்ளப்பட்டன வென்பதும் இச்சூத்திரத்தான் அறியலாம். (ജoല്ല)