பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

121


இந்த யயாதி நாடகத்திற்கு ஆங்கிலத்தில் “விதியும் காதலும்” என்று பெயர் வைத்தேன். நாடகம் கொஞ்சம் சிறிதாயிருந்தபடியால் கடைசியில், ஒரு பிரஹசனத்தைச் சேர்த்து ஆடினோம்; அப்படியாடியும் ஒரு மணிக்கெல்லாம் முடிந்து விட்டது. நாங்கள் இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே யென்று கொஞ்சம் பயப்பட்டபோதிலும் நாடகம் பார்க்க வந்தவர்களில் பெரும்பாலர், அவர்கள் தூக்கம் அதிகமாய்க் கெடாமல் சீக்கிரம் முடிந்ததற்காகச் சந்தோஷப்பட்டனர். இந்த நாடகத்தைப் போட்ட பிறகுதான் சாதாரணமாக நாடகங்கள் நான்கு மணி நேரத்திற்கு மேல் கொள்ளக் கூடாது என்று யோசிக்க ஆரம்பித்தோம்.

இந்த நாடகத்தில் ஜெயராம் நாயகர், கதாநாயகியாகிய சர்மிஷ்டை வேஷம் தரித்தனர். ஒரு பாட்டும் பாடாவிட்டாலும் அவரது வசனங்கள் மிகவும் நன்றாய் நடிக்கப்பட்டனவென்று எல்லோரும் கொண்டாடினர். பிறகு போஸ்ட் ஆபீசில் உத்தியோகஞ் செய்த, பி.எ. துரைசாமி ஐயர் என்பவர் தெய்வயானையாக மிகவும் விமரிசையாய் நடித்தனர். எம். வை. ரங்கசாமி ஐயங்கார், என் தோழனான காஞ்சேயனாக வேடம் பூண்டு தனது சங்கீதத்தினால் சபையோரை மிகவும் ரமிக்கச் செய்தார். ஆயினும் எல்லோரையும் விட இந்நாடகத்தில் சபையோரைச் சந்தோஷிக்கச் செய்தவர், ‘பப்பரன்’ வேடம் பூண்ட எம். துரைசாமி ஐயங்காரே! அவர் அரங்கத்தில் தோன்றும் பொழுதெல்லாம் விடாத நகைப்பை உண்டாக்கினர்.

இந்த நாடகத்தில்தான் என் ஆருயிர் நண்பராயிருந்த சி. ரங்கவடிவேலு முதலியார் முதல் முதல் எங்கள் சபையில் வேடம் பூண்டனர். அன்று முதல், தன் மரணபர்யந்தம், உடலும் நிழலும்போல் என்னைப் பிரியாதிருந்து, என்னுடன் ஏறக்குறைய எல்லா நாடகங்களிலும் என் மனைவியாக நடித்த இவரைப்பற்றிச் சற்று விரிவாக எழுத வேண்டியது என் முக்கியக் கடமையாகக் கொண்டு, அவரைப்பற்றி இனி எழுதுகிறேன்.

மேலே வரைந்துள்ள வாக்கியத்தை எழுதி இன்று நான்கு நாட்களாயின; இந்த நான்கு தினங்களாக, எனது நண்பரைப்