பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

247




பப்பரவாயன்?” என்று என் பக்கத்திலுட்கார்ந்து கொண்டிருந்த என் நண்பர்களிடம் ஏளனம் செய்தேன். இந்தப் பாப்ரவ்யன் பாத்திரம் நாடகத்தில் ஒரு காட்சியிலோ இரண்டு காட்சியிலோ தான் வருகிறது. நான் இந்நாடகத்தைத் தமிழில் அமைத்த பொழுது, இவனைப் பப்பரவாயனாக்கி, இவனுக்கு ஒரு தம்பி டமாரவாயனையும் கொடுத்து, இவர்களிருவரையும், ஹாஸ்யத்திற்காக நாடக ஆரம்ப முதல் கடைசி வரைக்கும் வரும்படியாகச் செய்தேன். நான் எழுதியபடி இந்நாடகத்தை எங்கள் சபையோர் பிறகு பன்முறை ஆடியிருக்கிறார்கள். அன்றியும் இதர சபைகள் இதை அநேகம் முறை ஆடியிருக் கின்றன. பால நாடகக் கம்பெனிகளில் பெரும்பாலும் இதை ஆடாதது கிடையாது. இப்படிப் பன்முறை இது நடிக்கப்படும் பொழுதெல்லாம், இந்தப் பப்பரவாயன் டமாரவாயன் பாத்திரங்கள் விடா நகைப்பையுண்டு பண்ணுகின்றன என்பதற்குச் சந்தேகமில்லை. இவ்விரண்டு பாத்திரங்களை இவ்வாறு எழுதியதுமன்றி, பழைய நாடகக் கதையிலில்லாத சில காட்சிகளையும் புதிதாய் ஏற்படுத்தி எழுதியுள்ளேன். இந்நாடகமானது ஒருமுறை பிரசிடென்ஸிகாலேஜில் (Presidency College) மாணவர்கள் ஆடியபொழுது, அங்கு வந்திருந்த சில சமஸ்கிருத வித்வான்கள், “நீங்கள் புதிதாய் எழுதிய காட்சிகள், நாடகக் கதைக்கும், நாடகப் பாத்திரங்களின் குணாதிசயங் களுக்கும் பொறுத்தமாயிருப்பதுதான் சிலாக்கியம்” என்று கூறினார்கள். அவர்கள் வார்த்தையை வெறும் முகமனாகக் கொள்ள எனக்கு நியாயமில்லை. இவ்வாறு நான் புதிதாக கை சரக்காய்ச் சேர்த்த காட்சிகளுள் ஒரு காட்சி எழுதினதற்கு ஒரு வினோதமான காரணம் உண்டு. அதை, இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு நான் தெரிவிக்க வேண்டியது அவசியம். நான் இது வரையில் ஆறு வருஷகாலமாக எங்கள் சபையின் தமிழ் நாடகங்களிலெல்லாம் ஆண் வேடமே பூண்டு நடித்து வந்தேன். “தமிழ் நாடகத்தில் நீ ஸ்திரீ வேஷம் தரித்ததை நாங்கள் பார்க்கவேயில்லை; ஏதாவது ஒரு நாடகத்தில் ஸ்திரீ வேஷம் நீதரிக்கவேண்டும்” என்று என் நண்பர்கள் பன்முறை கேட்டிருந்தனர். எனக்கும் இவ் விஷயத்தில் ஓர் அற்ப ஆசை இருந்தது; ஒரு முறை தமிழ் நாடகத்தில் ஸ்திரீ வேஷம் தரித்து எப்படி இருக்கிறதென்று பார்க்க வேண்டுமென்று ஏதாவது சமயம் கிடைக்குமாவென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவன். ரத்னாவளி, நாடகத்தை நான் தமிழில் அமைத்துக் கொண்டு