பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

249




இந்த 1897ஆம் வருஷம், சென்னை ராஜதானியில் எங்கள் சபையைப்போன்ற அநேக சபைகள் அதுவரையில் ஏற்பட்டிருந்தபடியால், அவைகளின் அங்கத்தினரையெல்லாம் ஒருங்கு சேர்த்து, ஒரு கூட்டம் கூடி, தென் இந்திய நாடக மேடையை எப்படி முன்னுக்குக் கொண்டு வருவது என்பதைப் பற்றி ஆலோசிக்க வேண்டுமென்று தீர்மானித்து, அங்ஙனமே விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஒரு கூட்டம் கூட்டினோம்.

அதற்கு, வெளியூரிலிருந்து சபைகளின் பிரதிநிதிகள் ஒருவரும் வராவிட்டாலும், சென்னையிலுள்ள எல்லாச் சபைகளும் பிரதிநிதிகளை அனுப்பின. அக் கூட்டத்திற்கு ஆர்.எஸ். லெப்பர் என்பவர் அக்கிராசனாதிபதியாக இருந்தார். தென் இந்திய நாடக மேடையிலுள்ள பல குற்றங்களை எடுத்துப் பேசி, அவைகளைத் திருத்துவதற்கு மார்க்கங்கள் இன்னவென்று பல ஆலோசனைகள் செய்த போதிலும், அவைகளெல்லாம் இம்மாதிரியான கூட்டங்களின் பெரும் பான்மை வழக்கப்படி, ஆலோசனைகளாகவே நின்று விட்டன! நமது நாட்டை இத்தகைய குற்றம் எப்பொழுது விட்டொழியுமோ, அறிகிலேன்.


பதினான்காம் அத்தியாயம்


று வருஷமாகிய 1898இல் இந்தியா தேச முழுவதையும் பீடித்த பிளேக் (Plague) பண்டுக்காக இரண்டு நாடகங்கள் நடத்தியதுமன்றி, எங்கள் சபையில் டிசம்பர் மாதம் ஐந்து நாடகங்களை நடத்தினோம். இதுதான் கிறிஸ்ட்மஸ் விடுமுறையில் எங்கள் சபையார் நாடகங்களை மொத்தமாக நடத்த ஆரம்பித்தது. இவ்வருஷம் தெலுங்கில் அரிச்சந்திர நாடகத்தையும், தமிழில் சத்ருஜித், லீலாவதி-சுலோசனா, மனோஹரா, கள்வர் தலைவன் என்னும் நாடகங்களையும் நடத்தினோம்; ஒன்றுவிட்டொரு நாள் வரிசையாக ஐந்து நாடகங்கள், இரவில் 9 மணி முதல் ஏறக்குறைய 2 மணி வரையில் ஆடுவதென்றால் கஷ்டமாகத்தானிருந்தது. ஆயினும் அக்காலம் எல்லா ஆக்டர்களும் நல்ல வாலிபத்தி லிருந்தபடியால் அந்தச் சிரமத்தை நாங்கள் கவனிக்கவில்லை.