பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

நாடக மேடை நினைவுகள்




அதன்மீது, அக்கஷ்டத்தை அறிந்தவனாய், மறு ஒத்திகையில் அந்தப் பாகம் வரும்பொழுது, நீ சோகத்தால் மூர்ச்சையானவள் போல் விழுந்துவிடு என்று சொல்லி, என் நாடக ஏட்டிலும் “ஹா” என்று கூவி மூர்ச்சையாகிறாள் என்று எழுதி வைத்தேன். இவ்விரகசியம் எப்படியோ வெளியாகி, நாடக தினத்தில், இக்காட்சியில் கிருஷ்ணசாமி ஐயர் பாட ஆரம்பித்தவுடன், ராமநாத ஐயர் மூர்ச்சையாகி விழுந்து விடவே, சபையோரெல்லாம் நகைக்க ஆரம்பித்தனர்! இதற்கடுத்தாற்போல் இந்நாடகமானது பன்முறை பிறகு நடிக்கப்பட்ட பொழுது, இந்த ரத்னாவளியின் பாகம் எடுத்துக்கொண்ட எனது நண்பர் எம். ராமகிருஷ்ண ஐயருக்கும் பாடத் தெரியாது. ஆகவே இவரும் இக்காட்சியில் மூர்ச்சை யாகும் பொழுதெல்லாம், பாடத் தெரியாதபடியால் மூர்ச்சையாகிவிட்டார் என்று சபையோர் ஏளனம் செய்வது வழக்கமாகிவிட்டது. இப்பொழுதும் ஏதாவது நாங்களெல்லாம் உட்கார்ந்து வேடிக்கையாய்ப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, “ஹா! மூர்ச்சையாகிறாள்” என்று எனது நண்பர்கள் ஏளனம் செய்வார்கள். இப்பொழுதும் யாராவது பாடத் தெரியாத ஸ்திரீ வேஷதாரி, எங்கள் சபை நாடகத்தில் வந்தால், என்ன, “ஹா! மூர்ச்சையாகிறாளோ?” என்று கேட்பார்கள் வேடிக்கையாக. எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு எங்கள் சபையில் சுமார் 28 வருஷங்கள் நடித்த பாத்திரங்களுக்குள் ஒரு முக்கியமான பாத்திரம்; இந்நாடகத்தில் அவர் சுபத்திரையாக வந்ததே. இந்த சுபத்திரையாக நடிப்பதில் அவருக்கு அதிகப் பிரீதியிருந்தது. சந்தியாவளியைப்போல் அவ்வளவு பெரிய பாகமுடைய பாத்திரமாயில்லாவிட்டாலும், நன்றாய் நடிப்பதற்கு அநேக இடங்கள் அமைந்திருந்தன. இவர் சுபத் திரையாக இந்நாடகத்தில் நடித்தபொழுதெல்லாம் வந்திருந்தவர் களுடைய மனத்தைக் கவர்ந்தனர் என்று நான் கூறுவது மிகையாகாது. இதில் நடிக்கும் பொழுது, ப்ரௌடா நாயகியாகிய ஒரு குல பத்தினி எப்படி வேஷம் பூண வேண்டுமோ, அதற்குத் தக்கபடி வேஷம் பூண்டு, மிகவும் ஒழுங்காய் நடிப்பார். முக்கியமாக சுபத்திரை தன் கணவனான அர்ஜுனனை வசப்படுத்த வேண்டி, வயிற்று நோயால் ஏதோ பாதைப்படுவதாக நடிக்கும் காட்சியில், இவருக்கு நிகர் ஒருவரும் இல்லையென்றே சொல்ல வேண்டும். இவருக்குப் பிற்காலம் இந்தக் காட்சியை சில ஆக்டர்கள் ரசாபாசப்படுத்