பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

253





தியதை நான் கண்ணாரக் கண்டிருக்கிறேன். சற்றேறக்குறைய ரங்கவடிவேலுக்குச் சமானமாக, இக் காட்சியில் நடித்தது, கே. நாகரத்னம் ஐயர் ஒருவர்தான் என்பது என்னபிப்பிராயம்.

இந்நாடகமானது எங்கள் சபையோரால் பன்முறை பிறகு நடிக்கப்பட்டது. அங்ஙனம் நடிக்கப்பட்ட பொழுதெல்லாம் சித்திரசேனர் வேடம் டாக்டர் ஸ்ரீனிவாசராகவாச்சாரி பூண்டனர். முதல் சித்திரசேனனைப் போலல்லாது, இவருக்கு நன்றாய்ப் பாடத் தெரியுமாதலால், இப் பாத்திரத்தில் அநேகம் பாட்டுகளைப் பாடுவார். கிருஷ்ணசாமி ஐயருக்குப் பின் சந்தியாவளி வேடம் பூண்ட டி.சி. வடிவேலு நாயகரும் இந்நாடகத்தில் அதிகப்பாட்டுகள் பாடுவது வழக்கமாதல் பற்றி, இந்நாடகத்தை எங்கள் சபை அங்கத்தினர் “சங்கீத காலவர்” என்று பெயரிட்டழைப்பதுண்டு. சில சமயங்களில் இதில் எல்லா ஆக்டர்களும் சேர்ந்து சுமார் 50 பாட்டுகள் பாடியதுமுண்டு. ஆகவே, யாராவது சுகுண விலாச சபையில் பாட்டுக்குறைவு என்று சொல்வார் களாகில், “காலவ ரிஷி” நாடகத்திற்கு வந்து பாருங்கள், என்று நான் பதில் உரைப்பேன்.

இந்தக் “காலவ ரிஷி” நாடகமானது இதர சபையோர் களாலும், நாடகக் கம்பெனிகளாலும், முக்கியமாக, பாய்ஸ் கம்பெனிகளாலும் பன்முறை ஆடப்பட்டிருக்கிறது. நான் அறிந்தபடி இதுவரையில் 307 முறை ஆடப்பட்டிருக்கிறது. நான் அறியாதபடி எத்தனை முறை ஆடப்பட்டிருக்கிறதோ ஈசனுக்குத்தான் தெரியும்.

இந் நாடகமானது எங்கள் சபையில் வருஷத்திற்கு ஒரு முறையாவது சராசரியில் போடப்படும். கிறிஸ்ட்மஸ் விடுமுறையில் மொத்தமாகப் பத்து அல்லது பதினைந்து நாடகங்கள் போடும் பொழுதெல்லாம் இது ஒன்றாய் இருக்கும்; அன்றியும் நாங்கள் வெளியூருக்குப் போய் நாடகம் ஆடிய பொழுதெல்லாம், ஆடிய நாடகங்களில் இது ஒன்றாயிருந்தது. இதுவரையில் எங்கள் சபைக்கு அதிக பொருளைச் சேர்ப்பித்த நாடகங்களில் இது ஒரு முக்கியமானதாகும்.

1899ஆம் வருஷம் நான் “நற்குல தெய்வம்’ என்னும் ஒரு சிறு நாடகத்தை எழுதினேன். இவ்வருஷம் சபை பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக ஏதாவது புதியதாய் வேண்டு மென்று எனது நண்பர்கள் கேட்டுக் கொண்டதன்பேரில் இது எழுதப்பட்டது. கொஞ்ச நாளாக ராமாயணத்திலிருந்து சீதா