பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

நாடக மேடை நினைவுகள்




எழுத்துகளைக் கொண்டே தமிழ்ப் பெயர்களாக மாற்றினேன்; பிரடெரிக் என்பதை பிரதாபதீரனெனவும், ஆலிவ் என்பதை ஹலவீரன் எனவும், சீலியா என்பதை சுசீலா எனவும் இம்மாதிரியாக மாற்றிக்கொண்டு போனேன்; அன்றியும் அர்த்தப் பொருத்தமுமிருக்குமாறு, ஆர்லாண்டோ எனும் கதாநாயகனுடைய பெயரை, அமரசிம்ஹன் எனவும், ராசலிண்ட் என்கிற பெயரை ராஜீவாட்சி எனவும் மாற்றினேன். மற்றப் பெயர்களின் பொருத்தத்தை, நான் அச்சிட்டிருக்கும் இந்நாடகத்தில் எனது நண்பர்கள் பார்த்துக் கொள்வார்களாக.

இந் நாடகத்தை விக்டோரியா பப்ளிக் ஹாலின் அடமானத்தை மீட்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பண்டிற்காகச் சீக்கிரம் கொடுக்க வேண்டுமென்று எங்கள் நிர்வாக சபையார் தீர்மானித்தபடியால், நாடக முழுவதையும் மொழி பெயர்க்காது, ஆடவேண்டிய பாகங்களை மாத்திரம் முதலில் மொழி பெயர்த்தேன். அதன்பிறகு சில வருடங்கள் கழித்து இதைப் புஸ்தக ரூபமாக அச்சிட்டு வெளிப்படுத்திய சமயத்தில்தான், நாடக முழுவதையும் தமிழில் அமைத்தேன்.

அன்றியும் ஹைமன் (Hymen) என்கிற பாத்திரமானது தமிழ் நாட்டிற்கு உரித்தாயிராதபடியாலும், மேல் நாட்டாரும் அநேகம் கற்றறிந்தவர்கள், அப்பாத்திரம் இந்நாடகத்தில் ஷேக்ஸ்பியர் மஹா நாடகக்கவியால் எழுதப்படாது பிறகு இந்நாடகத்தில் நுழைக்கப்பட்டதென்று அபிப்பிராயப்படுகிற படியாலும், அதை என் தமிழ் அமைப்பில் நீக்கினேன். மேலும் ஷேக்ஸ்பியர் காலத்தில் சாதாரணமாக வழங்கிய சில வார்த்தை கள், தற்கால நாகரிகப்படி அசங்கியமாயிருக்குமென அவை களையும் மொழி பெயர்க்காது விட்டேன். இந்நாடகத்தை நாங்கள் ஆடியதைப் பற்றி எழுது முன், என் தமிழ் அமைப்பைப்பற்றி ஒன்று என் நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்; அதாவது, ஆங்கிலத்திலுள்ள ஒரு சொற்றொடரை எடுத்துக்கொண்டு அதற்கு, “ஈயடித்தான் கணக்குப் பிள்ளை” செய்தது போல், ஒவ்வொரு பதத்திற்கும் தமிழ் அர்த்தத்தை எழுதிக்கொண்டு போனால், அது சரியாக அர்த்தமுமாகாது, கிரந்த கர்த்தாவின் அபிப்பிராயத்தையும் சரியாக வெளிப்படுத்துவதாகாது என்று நம்பினவனாய், அர்த்த பாவத்தையே முக்கியமாகச் சரியாகத் தெரிவிக்க வேண்டும் என்னும் கோட்பாட்டைக் கொண்டு இந்நாட கத்தைத் தமிழில் அப்பொழுது எழுதினேன். அதற்குப் பிறகு