பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

261




இதுவரையில் ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியின் நாடகங்களுள் இன்னும் நான்கைந்து தமிழில் அமைத்திருக்கிறேன்; அவை களிலும் மேற்சொன்ன கோட்பாடுகளை யெல்லாம் கவனித்திருக்கிறேன்.

இனி இந்நாடகத்தை நாங்கள் 1902 மார்ச்சு மாதம் எட்டாம் தேதி விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஆடியதைப்பற்றி எழுதுகிறேன். இந் நாடகம் அன்றிரவு, ஐகோர்ட்டு ஜட்ஜாக யிருந்த பாடம் (Boddam) துரையவர்கள் ஆதரவில் நடத்தப் பட்டது. இந்நாடகத்திற்காகவென்று, புதிதாயின திரைக ளெல்லாம், ஒரு பாரசீக சித்திரக்காரரைக் கொண்டு எழுதி வைத்தோம்; சில நூதன உடைகளும் தயாரித்தோம். ஒத்திகைகள் எல்லாம் சரியாக நடந்து வந்தபடியால், நாடகமானது எல்லா விதத்திலும் மிகவும் நன்றாயிருந்ததென நான் சொல்ல வேண்டும். ஜனங்களும் ஏராளமாய் வந்திருந்தனர். மொத்த வரும்படியினின்றும் எங்கள் செலவு போக ரூபாய் 200 விக்டோரியா பப்ளிக் ஹால் அடமான மீட்சி பண்டுக்குக் கொடுத்தோம்.

அன்றிரவு இந்நாடகத்தில் முக்கிய ஸ்திரீ வேஷங்களாகிய சுசீலா ராஜீவாட்சி என்பவை கிருஷ்ணசாமி ஐயர், சி. ரங்கவடி வேலுவினால் பூணப்பட்டன. இவர்கள் இருவரும் ஒன்றாய்ப் பாடி நடித்தது சபையோரால் மிகவும் சிலாகிக்கப்பட்டது! அதற்கு முக்கியக் காரணம் அவர்களிருவரும் மேடையின்மீது மிகவும் அன்யோன்யமாய் ஒத்து உழைத்ததே; ஒருவருக் கொருவர் கொஞ்சமாவது மாச்சரியமின்றி, ஒருவருக்கொருவர் வேண்டிய உதவிகளையெல்லாம் செய்து கொண்டு, சந்தோஷ மாய், நாடக மேடையின்மீது ஆடிய இவர்களைப் போன்ற இரண்டு ஸ்திரீ வேஷதாரிகளை நான் இதுவரையில் கண்டதே யில்லை. இந்நாடகம் நன்றாயிருந்ததற்கும், இன்னும் இவர்க ளிருவரும் பல தடவைகளில் ஒன்றாய் நடித்த நாடகங்கள் நன்குயிருந்ததற்கும், இவர்களிருவரும் ஒற்றுமை யுடையவர் களாய் நடித்ததே முக்கியக் காரணம் என்று நான் நம்புகிறேன். அக்காலத்தில் எங்கள் சபை மற்ற சபைகளைவிடப் பெரும் பெயர் பெற்றதற்கு, ரூபத்திலும், சங்கீதத்திலும், நடிப்பதிலும் ஏறக்குறைய சமமான தேர்ச்சியுடைய இவ்விரண்டு ஆக்டர்களுமே முக்கியக் காரணர்களாயிருந்தார்கள் என்று நான் தடையின்றிச் சொல்ல வேண்டும். அக் காலத்திலெல்லாம், ஏதாவது எங்கள் சபையில் நாடகம் போட்டால் கிருஷ்ண