பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

நாடக மேடை நினைவுகள்





சாமியும் ரங்கவடிவேலுவும் வருகிறார்களா என்று கேட்டுக் கொண்டு வருவார்கள். அப்படிப்பட்ட கியாதியை இவர்களிரு வரும் பெற்றிருந்தனர். தற்காலத்திய ஆக்டர்களும் இவர் களைப்போல், ஒத்து உழைத்து சுயநன்மையைப் பாராமல் சபையின் பெயருக்காகக் கஷ்டப்பட்டு, எங்கள் சபையின் பெயரைக் காப்பாற்றுவார்களாக என்று எல்லாம் வல்ல கடவுளின் கிருபையைப் பிரார்த்திக்கின்றேன்!

பிறகு எங்கள் சபையில் பத்மாவதி வேடத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற எஸ். பத்மனாபராவ் பத்மினியாக நன்றாய் நடித்தார். ஆண் வேடங்களில், ஹலவீரனாக எம். சுந்தரேச ஐயர் நடித்தார். இந்நாடகத்தில் ஒரு கஷ்டமான பாகம் (மிகவும் கஷ்டமான பாகம் என்றே நான் சொல்ல வேண்டும்) ஐகந்நாதன் என்பது. இதை ரங்கவடிவேலுவின் மைத்துன ராகிய தரமோதர முதலியாருக்குக் கொடுத்திருந்தேன். இதுதான் அவர் எங்கள் சபையில், முதல் முதல் ஒரு முக்கியமான வேடம் பூண்டது. இதற்கப்புறம் அநேகம் முக்கியப் பாத்திரங்களைப் பூண்டிருக்கின்றனர். இவருடைய சில அரிய குணங்களைப் பற்றி இங்கு நான் எழுத வேண்டியது என்கடமையாகும். இவர் கலாசாலைப் பரீட்சைகளில் தேறாதவராயினும் மிகுந்த புத்திக் கூர்மை வாய்ந்தவர்; அன்றியும் விடா முயற்சியுடையவர். ஏதாவது ஒரு காரியத்தை மேற்பூண்டால் தன்னாலியன்ற அளவு முயன்று அதை எப்படியாவது சாதிப்பார்; நாடக விஷயங்களிலும் அப்படியே. மற்றச் சபை விஷயங்களிலும் அப்படியே. ஏதாவது நாடகப் பாத்திரத்தை நான் அவருக்குக் கொடுத்தேனாயின், அதைப்பற்றி என்னிடமிருந்தாவது இதரர் களிடமிருந்தாவது தான் எவ்வளவு அறியக்கூடுமோ அவ்வளவு அறிந்து கொள்வார். எடுத்துக்கொண்ட நாடகப் பாத்திரத்திற் கேற்றபடி உடை தரிப்பதிலும், வேஷம் போட்டுக் கொள்வ திலும் இவருக்கு மேலானவர்கள் எங்கள் சபையில் இல்லை யென்றே சொல்ல வேண்டும். இந்த ஜகந்நாதன் பாகத்தில் இவர் எனக்குக் கொடுத்த கஷ்டம் எனக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட கஷ்டம் கொடுப்பார் இப்பொழுது இல்லையே என்பதுதான் என் வருத்தம்! ஏதாவது ஒரு காட்சியில் இப்படி நடிக்க வேண்டுமென்று நான் சொல்லுவேனாயின், அது தன் மனத்தில் நன்றாய்ப் படுகிறவரையில் என்னைத் திருப்பித் திருப்பி அதை நடித்துக்காட்டச் சொல்வார். அதனுடன்விடாது, பிறகு தான் அதை ஒத்திகை செய்து, தனக்கு நான் சொன்னபடி