பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

நாடக மேடை நினைவுகள்




உழைத்தவர். இரண்டொரு முறை அச்சபையார் நாடகங்களை நான் பார்க்கப் போனபொழுது; அங்கு நான் கண்ட நாடகப் பாத்திரங்களுக்கு முகத்தில் வர்ணம் தீட்டியிருந்தது மிகவும் நன்றாயிருந்ததென வியந்தவனாய், இது யார் செய்தது என்று விசாரிக்க, வெங்கடாசல ஐயர், இந்தச் சபையில் சேர்ந்தவர், இவர்தான் இச்சபையின் ஆக்டர்களுக்கெல்லாம் வேஷம் போடுவது என்பதை அறிந்தேன். எங்கள் சபையில் அப்பு போடும் வேஷத்தைவிட இது மிகவும் நன்றாயிருந்தமையால், எப்படியாவது இவரை எங்கள் சபையில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று பிரயத்தனப்பட்டேன். எனது பால்ய நண்பர் வி.வி.ஸ்ரீனிவாச ஐயங்கார் மூலமாக இவருடன் பரிச்சயம் செய்துகொண்டு, மெல்ல, எங்கள் சபையில் சேருகிறது தானே என்று பிரஸ்தாபித்தேன். இச்சமயத்தில் அவர்களுடைய சபையானது யாது காரணத்தினாலோ, க்ஷணதசையிலிருந்தது; அது பாதி, நான் கேட்டது பாதியாக இவர் எங்கள் சபையைச் சேர இசைந்தார்; வருபவர்சும்மா வராமல் அச்சபையில் முக்கிய ஆக்டர்களாயிருந்த ராமமூர்த்தி பந்துலு, எஸ். வெங்கடாசல சாஸ்திரி இருவரையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்தார். அந்தச் சபையில் ஒரே பெயர் கொண்ட இவர்கள் இருவரும் ஆக்டர்களாயிருந்தபடியால் இவர்களைத் தனித் தனியாகக் குறிப்பிட, கறுப்பு நிறமுடைய இவருக்கு ‘நல் லையா’ என்றும்; சிவப்பு நிறமுடைய மற்றவருக்கு ‘எர்ரையா’ என்றும் பெயர் வழங்கியிருந்தது; எங்கள் சபைக்கு வந்த பிறகும் இவ்விருவருக்கும் அதே பெயர்கள் வழங்கலாயின. இவருடைய முக்கியமான பெருமை என்னவென்றால், எந்த வேஷம் வேண்டுமென்றாலும் தரிப்பார். முக்கியமாக ஹாஸ்ய பாகங்களிலேயே இவர் பெயர் பெற்ற போதிலும், சமயம் நேரிட்டால் அரசன் முதல் அனுமார்வரை எந்த வேடம் வேண்டுமென்றாலும் பூணுவார். அப்படிப் பூணுவதிலும், அந்தந்த வேஷத்திற்குத் தக்கபடி நடையுடை பாவனைகளை மேற்கொள்வதில் மிகவும் சமர்த்தர். ஒன்றுக்கொன்று வெகு தூரத்திலுள்ள அரசனாகவும், தோட்டியாகவும், பீமசேன னாகவும், விதூஷகனாகவும், வேசியாகவும், தாய்க் கிழவியாக வும், குறவனாகவும், கோபிகா ஸ்திரீயாகவும், இன்னும் இப்படிப்பட்ட பல வேடங்களில் தோன்றியிருக்கிறார் எங்கள் சபையில். இத்தகைய வேடங்கள் பூணுவதன்றி, மிகவும் துரிதமாக ஒரு வேடத்தினின்றும் மற்றொரு வேடத்திற்கு