பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

287




இந்நாடத்தின் ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால், இதில் நடித்த முக்கியமான வேஷதாரிகள் மட்டுமன்றி, எல்லா ஆக்டர்களும் தங்களுடைய பாகம் எவ்வளவு சிறிதாயிருந்த போதிலும், மிகவும் நன்றாய் நடித்ததேயாம். இதுவே இந்நாடகத்தின் பெரும் பெருமையாம். இம்மாதிரியாக எல்லா ஆக்டர்களும் நன்றாய் நடித்த நாடகங்கள் எங்கள் சபையில் சிலவேயென்றுதான் நான் கூற வேண்டும். எனது பழைய நண்பரான அ. வாமன்பாய் என்பவர் மறு நாள் எனக்குக் கூறியபடி, அன்றிரவு தோட்டத்தில் நடத்திய நாடகமாதலால் காட்சிக்கும் காட்சிக்கும் இடையில் காலம் போக்காமல் காட்சியின்மேற் காட்சியாய், மிகவும் அழகாய் நடந்ததென எல்லோரும் கூறனார்கள். ஆங்கிலத்தில் “The proof of the pudding is in the eating” என்று ஒரு பழமொழியுண்டு . அதைத் தமிழில் “அப்பம் நன்றாயிருக்கிற தென்பது அதைத் தின்பதனால் தெரியும்” என்று ஒருவாறு மொழிபெயர்க்கலாம். அதன்படி, இந்நாடகம் நன்றாயிருந்ததென்பதற்கு அத்தாட்சி யாக, அதுவரையில் எங்கள் சபையில் சேராதிருந்த அநேக மைலாப்பூர் வக்கீல்கள், உத்யோகஸ்தர்கள் முதலியோர் எங்கள் சபையைச் சேர்ந்ததைத்தான் கூற வேண்டும்.

இனி 1905ஆம் வருஷம் எங்கள் சபையில் நடந்த முக்கியமான விஷயங்களைப் பற்றி எழுதுகிறேன்.

இவ்வருஷம்தான் நாங்கள் முதல் முதல் ஷேக்ஸ்பியர் மஹா நாடகக் கவியின் பிறந்த நாளைக் கொண்டாடத் தொடங்கினோம். உலகெங்கும் பிரசித்திபெற்ற இந்த நாடகக் க்வியின் பிறந்த தினத்தை இங்கிலாந்து தேசத்தில், அவர் பிறந்த இடமாகிய ஸ்டிராட்போர்டு ஆன் ஆவன் (Stratford on Avon) என்கிற இடத்தில் கொண்டாடுவதை அறிந்தவர்களாய், அதை நாடகம் விருத்தியைக் கருதிய நாமும் கொண்டாட வேண்டுமென்று தீர்மானித்து, விக்டோரியா பப்ளிக் ஹாலை ஒரு வாரத்திற்கு வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். அந்த வாரத்தில் ஒரு நாள், அவர் எழுதிய ஒரு நாடகத்தின் தமிழமைப்பாகிய “வாணீபுரவணிகன்” என்பதைத் தமிழிலும், மற்றொரு நாள் “ஒதெல்லோ” எனும் சிறந்த நாடகத்தை அவர் எழுதியபடியே ஆங்கிலத்திலும், இன்னொரு நாள் “ஆல்ஸ் வெல் தட் என்ட்ஸ் வெல்” (All is well that ends well) என்னும் அவர் எழுதிய நாகடத்தைத் தெலுங்கிலும் நடத்தினோம்;