பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288

நாடக மேடை நினைவுகள்




அன்றியும் இவ்வாரத்தின் கடைசி நாளின் கிராண்ட் ஷேக்ஸ் பியர் கார்னிவல் என்று ஒன்று ஏற்பாடு செய்தோம். இதற்குத் தமிழில் ‘ஷேக்ஸ்பியர் கொண்டாட்டப் பண்டிகை’ என்று ஒருவாறு கூறலாம். இதில் எங்கள் சபை ஆக்டர்களில் அநேகர் ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களிலுள்ள பாத்திரங்களின் வேடங்கள் தரித்து வந்தனர். சற்றேறக்குறைய அச்சமயத்தில் தான் எங்கள் சபையைச் சேர்ந்த ஸர். சி.பி. ராமசாமி ஐயர் அவர்கள், இச்சமயம் போர்ஷியாவாக வேடம் தரித்தது எனக்கு நன்றாக ஞாபாமிருக்கிறது; கொஞ்சநேரம் ஹாலில் இருந்து விட்டுப் பிறகு வேஷத்தைக் கலைத்துவிட்டனர்; இந்த ஒரு முறைதான் இப்பொழுது எங்கள் சபையின் அத்யட்சராயிருக்கும் இவர் எங்கள் சபையில் வேஷம் பூண்டது. நான் ஒதெல்லோ என்னும் நாடகத்தில் வரும் ஒரு பாத்திரமாகிய “இயாகோ” (lago) வேடம் தரித்தேன். எனது பால்ய நண்பரான வி.வி.ஸ்ரீனிவாச ஐயங்கார், “இந்திய நாடக மாது” எனும் ஸ்திரீ வேஷம் தரித்தார். அவரது கையில் ஷேக்ஸ்பியர், காளிதாசன், சம்பந்தம் என்னும் மூன்று பெயர்களும் வரைந்த ஒரு கேடயத்தைப் பிடித்திருந்தார். அவ்விரண்டு மகா நாடகக் கவிகளுக்கும், சிற்றறிவுடைய எனக்கும் அஜகஜாந்தரமாக வித்தியாசமிருந்தபோதிலும், நம்முடைய பெயரையும், அம் மாகான்களின் பெயருடன் சேர்த்துக் கூறும்படியான பாக்கி யத்தைப் பெற்றோமே என்று சந்தோஷித்தேன். என்னுடைய தமயனார் ஆறுமுக முதலியார், யாரும் பூண இச்சைப்படாத, அசங்கியமான காட்டு மனிதன் உருவையுடைய காலிபன் (Caliban) வேடம் பூண்டது வெகு விந்தையாயிருந்தது. இம்மாதிரியாக, ஏறக்குறைய நாற்பது ஐம்பது பெயர்கள் வேடம் பூண்டு வந்தனர். அன்றைத் தினக் கொண்டாட்டம் மிகவும் ‘விமரிசையாக இருந்ததென வந்திருந்தவர்கள் புகழ்ந்தனர். இம்மாதிரியாக இந்த வருஷம் வெகு சம்பிரமத் துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஷேக்ஸ்பியர் கொண்டாட்ட மானது, இந்த இருபத்தெட்டு வருடங்களாக நடந்து வருகிறது. மூன்று நாள் நாடகங்கள் ஆடா விட்டாலும், ஷேக்ஸ்பியர் மகாகவியின் ஒரு நாடகமாவது ஆடி வருகிறோம். அன்றியும் வருடா வருடம், ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களைப் பற்றியோ, அவரைப்பற்றியோ யாராவது ஓர் அங்கத்தினர், ஒரு உபன்யாசம் செய்து வருகிறார். 1931ஆம் வருடம் மாத்திரம் இக் கொண்டாட்டம் நடவாமல் போயிற்று என்று சொல்ல நான்