பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

289




மிகவும் துக்கப்படுகிறேன். இனிமேலாவது எங்கள் சபையார் இதை ஒரு வருடமும் விடாது நடத்துவார்களெனப் பிரார்த்திக்கிறேன்.

சபையில் கௌரவம் வஹிக்க விரும்பும் இளைஞர்களான அங்கத்தினர் அதன் கஷ்டத்தையும் கொஞ்சம் மேற்கொள்ள இசைவார்களென நம்புகிறேன். கஷ்டப்படாமல் ஒரு காரியத்தையும் சாதிக்கமுடியாது என்பதை அவர்களுக்கு இதன் மூலமாக நினைப்பூட்டுகிறேன்.

இவ்வருஷம்தான் எங்கள் சபைக்குச் சொந்தமான ஒரு நாடக சாலையும் இருப்பிடமும் கட்ட வேண்டுமென்னும் யோசனை பிறந்ததெனக் கூற வேண்டும். இதற்கு முக்கியமான காரணம், அக்காலம் எங்கள் இருப்பிடமாகிய விக்டோரியா ஹாலின் மேற்குப் பக்கம், தற்காலம் சிற்றுண்டி தயாரிக்கும் அறையானது, எங்கள் ஒத்திகைகளுக்குப் போதுமான வசதியாயில்லாமையே. அன்றியும் இவ்வருஷத்தில் எங்கள் சபையின் அங்கத்தினர் அதிகரித்து 278 பெயர்களாகி விட்டனர். எங்கள் சபை 1891ஆம் வருஷம் ஆரம்பித்த பொழுது, ஏழு பெயர்கள்தான் அங்கத்தினராயிருந்த விஷயம் நான் முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். ஆறு வருஷம் பொறுத்து நூறு அங்கத்தினர்களானார்கள். அந்த நூறாவது மெம்பராகிய வி. தாத தேசிகாச்சாரியார், பி.ஏ. பி. எல்., எங்கள் சபை தம்பு செட்டித் தெருவிலிருக்கும் பொழுது, தான் நூறாவது மெம்பரானதற்காக ஒரு சிறு விருந்து கொடுத்தார். அதன் பிறகு, எட்டு வருடம் பொறுத்து, இவ்வருஷம் (1905) ஆரம்பத்தில் இருநூறு மெம்பர்களானோம். இவ்வாறு இருநூறாவது மெம்பராகிய வி.வி. முத்துக்கிருஷ்ண ஐயர் பி.ஏ.பி.எல். இதற்காக ஒரு சிறு விருந்து கொடுத்தார். இவ் வருஷத்திய, நாங்கள் முதல் முதல் அச்சிட்ட விளம்பரத்தில் (Report) கூறியபடி, இவ்வருஷ முடிவுக்குள்ளாக 300ஆவது எண் கிட்டிவிடும் என்று ஒருவரும் நினைக்கவில்லை. இக்காலத்தில் எங்கள் சபையின் அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் மிகுந்த ஊக்கத்துடன் உழைத்தபடியாலும், நல்ல நாடகங்கள் தமிழிலும் தெலுங்கிலும் அடிக்கடி கொடுத்துக் கொண்டு வந்தபடியாலும் எங்கள் சபை அதிவிரைவாக விருத்தியடைந்த தென்பதற்குச் சந்தேகமில்லை.. இவ்வாறு அங்கத்தினர் அதிகமாகவே, ஏதாவது விசேஷ காலங்களில் இத்தனை பெயரும், 50 பெயர்கூட உட்காருவதற்கிடமில்லாத ஒரு சிறு