பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

291




விடுவானேன்? இங்கேயே வைத்து வைக்கலாகாதா’ என்று எங்களுக்குள் பேசிக்கொண்டு சபையிலேயே ஒரு மூலையில் வைத்தோம். வெள்ளிக்கிழமைகளில் அதற்குக் கொஞ்சம் புஷ்பம் சாத்தி, கற்பூரம் கொளுத்தி வந்தோம். இப்படியிருக்க சீக்கிரத்தில் நவராத்திரி வர, சென்னையில் குஜராத்திப்பேட்டையிலும், இன்னும் சில வீடுகளிலும் கொலு வைக்கிறார்களே அம்மாதிரி நாமும் ஏன் இங்கு வைக்கக்கூடாது என்று யோசித்து, அப்படியே செய்ய வேண்டுமென்று தீர்மானித்து, நவராத்திரிக் கொலுவுக்காக ஏற்பாடு செய்தோம். அக்காலம் நாங்கள் ஏதாவது ஒன்று செய்ய வேண்டுமென்று தீர்மானித்தால் ஆரம்பித்த காரியத்திற்குக் குறையினைக் கூறாது எல்லோரும் குதூஹலத்துடன் கைகொடுத்து உதவும் காலமா யிருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வீட்டிலிருந்த அழகிய பொம்மைகள் முதலியவற்றைக் கொண்டுவந்து கொலுவுக்காகக் கொடுத்தனர். இவ்வாறு வேடிக்கையாக ஆரம்பித்த கொலுவானது வெகு மும்முரமாகிவிட்டது. ஓர் அம்மன் விக்ரஹத்தை நடுவில் ஸ்தாபித்து அதற்குப் பத்து நாட்களும் பூசை இயற்றினோம். இதற்கு ஆர். ஸ்ரீனிவாசராவ் என்னும் எங்கள் சபையைச் சார்ந்த ஒரு மகாராஷ்டிர பிராம் மணனை குருக்களாக ஏற்படுத்தினோம். தினம் அம்மனுக்கு ஒவ்வொரு வாகனமாக வைத்து திருவிழா கொண்டாடினோம். அதற்காக ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு உபயகாரரை ஏற்படுத்தினோம். ஒவ்வொரு உபயகாரரும் அன்றைத் தினம் பூஜைக்கு வேண்டிய புஷ்பம், நைவேத்யம் முதலிய செலவுக்காக ஒன்றிரண்டு ரூபாய் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

கோயில் உற்சவங்களில் உபயகாரர் போட்டி போட்டுக் கொண்டு செலவழிப்பதுபோல் நாங்களும் போட்டி போட்டுக் கொண்டு செலவழிக்க ஆரம்பித்தோம்! இவ்வாறு தசராக் கொண்டாட்டம் மும்முரமாய் நடக்கவே, முதல் நாள் பத்துப் பதினைந்து ஆக்டர்கள் மாத்திரம் கூடியிருக்க, வரவர எல்லா மெம்பர்களும் சாயங்காலங்களில் சேரத் தொடங்கிவிட, இடம் போதாமல், விக்டோரியா ஹாலின் தென்புறமிருந்த மைதானத்தில் ஒரு கூடாரம் அடித்து, அங்கே சிற்றுண்டி முதலியன அருந்த ஆரம்பித்தோம்! தசராவின் கடைசி நாட்களில் இந்தக் கூடாரமும் எங்களுக்குப் போதுமானதா யில்லாமற் போயிற்று. இவ்வருஷத்திய அறிக்கையில் எங்கள் சபைக்காரியதரிசிகளில் ஒருவராகியிருந்த எனது பால்ய நண்பர்