பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

21


சுகுண விலாச சபையை ஸ்தாபித்த பின் ஒத்திகைகள் நடத்த எங்களுக்கு ஓர் இடம் அதிக அவசியமாகத் தேவையாயிருந்தது. ஜனங்கள் குடியிருக்கும் வீடுகளில் நாடக ஒத்திகைகள் நடத்துவது உசிதமல்லவெனத் தீர்மானித்தோம். அதன்பேரில் தம்புசெட்டித் தெருவில் விஜயநகரம் மகாராஜா அவர்கள் நடத்தி வந்த பெண்கள் பள்ளிக்கூடக் கட்டிடம் இதற்கு சௌகர்யமாக இருக்குமென்று சபையின் காரியதரிசியாகிய முத்துக்குமாரசாமி செட்டியார் எனக்குத் தெரிவித்தார். அச்சமயம் அப்பள்ளிக்கூடத்தின் மேல் விசாரணைத் தலைவராக என் தகப்பனார் இருந்தார். ஆகவே அவரது உத்தரவைப் பெற என்னைக் கேட்டுக்கொண்டார்கள் ஒருநாள். முன்பே, என் தகப்பனாருடைய உத்தரவைப் பெற்றே இச்சபையைச் சேர்ந்தேன் என்று தெரிவித்திருக்கிறேன். ஆகவே அன்றிரவு நாங்கள் எல்லோரும் வீட்டில் சாப்பிட்டானவுடன் இவ்விஷயத்தைப்பற்றி என் தகப்பனாரிடம் தெரிவித்தேன்; வாரத்தில் இரண்டுநாள், வியாழக்கிழமை சாயங்காலம் ஆறுமணி முதல் எட்டு மணி வரைக்கும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு மணி முதல் எட்டுமணி வரைக்கும் வேண்டுமென்று தெரிவித்தேன்; அன்றியும் வாடகை ஒன்றும் எங்களால் கொடுக்க முடியாதென்பதையும் அவருக்குத் தெரிவித்தேன். அதற்கு அவர் ஒரு ஆட்சேபணையும் சொல்லாமல் ஆகட்டும் என்று இசைந்தார். இது சபையின் நிர்வாக சபையாருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அதுமுதல் சபையின் கூட்டங்கள் இங்கு நடந்து வந்தன.


நான்காம் அத்தியாயம்

முன்னமே தெரிவித்தபடி என் பரீட்சை யெல்லாம் முடிந்த பிறகு ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் நான்கு மணிக்கு இவ்விடம் போனேன். அப்பொழுது அக்கட்டிடத் தின் மாடியில் ஓர் அறையில் ஒத்திகை நடந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்த பொழுது ஒருபுறம் எனக்கு விந்தையாகவும் வினோதமாகவும் இருந்த போதிலும், மற்றொருபுறம் வருத்தமாயிருந்தது. ஒரு புறம் ஒருவர் பிடில் வாசித்துக்