பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/535

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

520

நாடக மேடை நினைவுகள்




டென்டாகிய ஆனரபில் டி.வி. சேஷகிரி ஐயர் அவர்கள், ஒரு பெரிய புஷ்பச் செண்டை வரவழைத்து ஹானரபிள் ஜஸ்டிஸ் சி. கிருஷ்ணன் மூலமாக, என் பெண்ணுக்குக் கொடுக்கச் செய்தார். பிறகு சில தடவைகளில் இந்நாடகம் எங்களால் ஆடப்பட்டபொழுது என் பெண் பெரியவளாகி விடவே, எனது நண்பர் கே. நாகரத்தினம் ஐயர் சகோதரியின் பெண் பத்மா இந்த வேடம் தரித்திருக்கிறது.

இந்த நாடகத்தில் தோன்றிய மற்றொரு பாத்திரத்தைப் பற்றிக் கொஞ்சம் எழுத விரும்புகிறேன்; அதாவது ஒரு நாட்டுக்கோட்டைச் செட்டியாரின் பாகம். இதைக் காலஞ் சென்ற எனது நண்பர் சோமசுந்தரம் பிள்ளை பி.ஏ., பி.எல். அவர்கள் தத்ரூபமாய் நடித்தார். சுபாவத்திலேயே இவரது தலை மொட்டையாயிருக்கும்; நிறம் கருப்பாயிருக்கும்; ஆகவே உருவம் நாட்டுக்கோட்டைச் செடடியார் வேடத்திற்கு மிகவும் தகுதியாயிருந்தது; அன்றியும் இவர் பல நாள் நாட்டுக்கோட்டைச் செட்டிகளுடன் பழகியதால், அவர்களைப் போலவே பேசுவார். இதையறிந்த நான், இவருக்கென்றே நாட்டுக்கோட்டைச் செட்டியார் பாத்திரம் எழுதினேன் இந்த நாடகத்தில். இவர் அன்று இப்பாத்திரத்தில் நடித்தது எல்லோருக்கும் இடைவிடா நகைப்பைத் தந்தது. இதற்கப்பாலும் இந்நாடகத்தில் இவ்வேடம் தரித்தவர்களுக்குள் தற்காலம் மதுரையில் இருக்கும் டாக்டர் வரதராஜ ஐயரே சிறந்தவர் என்று கூற வேண்டும்.

இந் நாடகமானது எனது நாடகங்களுக்குள் நடிப்பதற்குக் கஷ்டமானது; இது காரணம் பற்றியே நாடகக் கம்பெனிகளும், இதர சபைகளும் இதை அதிகமாய் ஆடியதில்லை.

இந்த 1919ஆம் ஆண்டில், எங்கள் சபை தசராக் கொண்டாட்டத்தில் ஒரு விசேஷமென்னவென்றால், சி.பி. ராமசாமி ஐயர் அவர்கள் நடத்தி வரும், “ஸ்திரீகள் தினம்.” விக்டோரியா பப்ளிக் ஹாலில் வரும் ஸ்திரீகளுக்கெல்லாம் இடமிராதென்று சவுத் இந்தியன் அத்லெடிக் அசோசி யேஷன் மைதானத்தில் ஒரு பெருங் கொட்டகையில் வைத்துக் கொண்டோம். சுமார் 1000 ஸ்திரீகளுக்குக் குறைவில்லாமல் வந்திருந்தனர்.