பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/536

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

521



இவ் வருஷம் நிகழ்ந்த இன்னொரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி என்னவென்றால், எங்கள் சபையின் கட்டட பண்டுக்காகப் பொருள் சேர்க்கும் பொருட்டு, நாடகசாலையும் இருப்பிடமும் கட்ட மற்ற ஏற்பாடுகள் செய்யும் பொருட்டும் ஒரு கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. அதற்கு என்னைக் காரியதரிசியாக நியமித்தார்கள். உடனே எங்கள் சபை அங்கத்தினர்க்கெல்லாம் எழுதிப் பொருள் சேகரிக்க ஆரம்பித்தேன். இவ்வருஷம் எங்கள் சபையின் அங்கத் தினர் சுமார் 8000 ரூபாய் வரைக்கும் கையொப்பமிட்டனர். அதில் பெரும்பாலும் வசூலிக்கப்பட்டது. இவ்வருஷத்தின் கடைசியில் எங்கள் கட்டட பண்டுத் தொகை 19628-4-6 ஆகியது. நான் இதற்காகக் கொஞ்சம் கொஞ்சமாகப் பொருள் சேர்த்த கதையை, பிறகு ஒரு சமயம் எழுதலா மென்றிருக்கிறேன்.


23 ஆவது அத்தியாயம்


னி, 1917ஆம் ஆண்டில் எங்கள் சபையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளைப்பற்றி எழுதுகிறேன்.

இவ்வருஷத்தில் சென்னைக்கு வெளியில் நாங்கள் ஆடிய நாடகங்கள் உட்பட, 53 நாடகங்களாடினோம். இதுதான் நாளது வரையில் எங்கள் சபையார் ஒரு வருஷத்தில் ஆடிய அதிக மொத்தமான நாடகங்கள். இவ்வருஷம் எங்கள் சபையின் நானூறாவது நாடகமாக ஆந்திர நாடகப் பிதாமகர் கிருஷ்ணமாச்சார்லு எழுதிய ‘பிரஹ்லாதா’ என்னும் நாடகத்தை நடத்தினோம். நான் இவ் வருஷம் புதிதாய் எழுதிய நாடகம் “ஊர்வசியின் சாபம்” என்பதாம். இக் கதை மஹாபாரதத்தினின்றும் எடுக்கப் பட்டது; ஊர்வசியானவள் அர்ஜுனன் தனக்கு இணங்கா ததற்காக அவனைப் பேடியாகும்படிச் சபித்த கதையாம். இதை நான் நாடக ரூபமாக அமைத்ததற்கு முக்கிய காரணம் பின் வருமாறு: எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு நாட்டியஞ் செய்யக் கற்றுக் கொண்ட பிறகு, அடிக்கடி அவரை, சந்தர்ப்பமில்லா இடங்களில்கூட நடிக்கும்படிப்