பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/538

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

523



பாரதக் கதையிருப்பதால், இக் காட்சியில் அத் தேவர்களெல்லாம் பரமேஸ்வரனைப் புடை சூழ்ந்திருப்பது போல் காட்சியை நிர்மாணிக்கச் செய்து, அதற்குரிய தேவதுந்துபி கோஷம் முதலியனவும் தக்கபடி ஏற்பாடு செய்தது, வந்திருந்தவர்களுடைய மனத்தையெல்லாம் கவர்ந்ததென் பதற்குத் தடையில்லை. ரங்கவடிவேலுவின் நடனத்தைப் பார்ப்பதற்கும், இக்காட்சியைக் காணவுமே பலர் இந் நாடகத்திற்கு வந்தனர் என்று கூற வேண்டும். இந் நாடகம் பிறகு பன்முறை சென்னையிலும், வெளியூர்களிலும் எங்கள் சபையோரால் ஆடப்பட்டது.

இந் நாடகம் நடிப்பதற்குக் கொஞ்சம் கஷ்டமான தனால் இதர சபைகள் இதை அதிகமாக ஆடுவதில்லை . ஊர்வசி வேடம் பூண்டு நர்த்தனஞ் செய்யத்தக்க ஆட்களையுடைய சபைகள்தான் இதை எடுத்துக் கொள்ளக்கூடும்.

இந் நாடகத்திற்காக நான் எழுதிய மூன்று இடைக் காட்சிகள், நான் எழுதியிருக்கும் ஹாஸ்யரசம் பொருந்திய காட்சிகளுள் சிறந்தனவென்று நான் நினைக்கிறேன். இவைகள் தனியாகப் பன்முறை ஆடப்பட்டிருக்கின்றன.

இவ் வருஷம், எங்கள் சபையில் சம்ஸ்கிருத நாடகப் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அதற்குக் காலஞ்சென்ற டி. எஸ். நாராயண சாஸ்திரியாரைக் கண்டக்டராக ஏற்படுத்தினோம்; இவர் சம்ஸ்கிருதத்தில் மிகுந்த பாண்டித்யமுடையவர்; சம்ஸ்கிருதத்தில் “மத்தியம வியா யோகம்” என்னும் நாடகத்தை எழுதியவர்; தமிழிலும் கற்றவர். “போஜ சரித்திரம்” என்னும் நாடகத்தை எழுதினார். இப்போஜ சரித்திர நாடகமானது, அவரது காலத்தில் எங்கள் சபையில் ஆடப்படாது, அவர் காலமான பிறகு ஆடப் பட்டது, ஒரு பெருங்குறையென நான் மதிக்கிறேன். இவர் நடுவயதிலேயே காலகதியடைந்தது எங்கள் சபையின் சம்ஸ்கிருதப் பிரிவு செய்த தௌர்ப்பாக்கியமாகும்.

எங்கள் சபையானது இவ் வருஷம் வெளியூருக்கு இரண்டு முறை சென்றது; முதன் முறை பெங்களூருக்கும் இரண்டாம் முறை மாயவரத்திற்கும்; பெங்களூரில் 6 நாடகங்களும், மாயவரத்தில் 7 நாடகங்களும் ஆடினோம். இம் முறை பெங்களூருக்குப் போனது எங்கள்