பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/539

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

524

நாடக மேடை நினைவுகள்




சபை அவ்வூருக்கு மூன்றாம் முறை சென்றதாகும். பெங்களூருக்குப் போகலாகம் என்கிற விஷயம் பிரேரேபிக்கப் பட்டவுடன், நான் , “அதில் பிரயோஜனமில்லை; சபைக்கு நஷ்டம் ஏற்படும்” என்று ஆட்சேபித்தேன். “சூடுண்ட பூனை அடுப்பங்கரை ஏறாது” என்னும் பழமொழிக்கிலக்காக, இரண்டு முறை அங்குப் போய் வந்த அனுபவத்தைக் கொண்டு, வேண்டாம் என்று தடுத்தேன். அதன் பேரில், அங்கு போக வேண்டுமென்று விரும்பிய எங்கள் சபையின் ஆக்டர்களிற் சிலர், என்னுடன் பேசுவதில் பிரயோஜன மில்லை யென்று கண்டவராய், எனதுயிர் நண்பர் ரங்க வடிவேலுவிடம் போய் அவர் மனத்தைக் கலைத்தனர். அதன்பேரில் எனது நண்பர் என்னிடம் வந்து, “எப்படியாவது சபை இவ்வருஷம் பெங்களூருக்குப் போக வேண்டும். நீங்கள் ஆட்சேபம் செய்யக் கூடாது” என்று தன்னாலியன்ற அளவு வாதித்துப் பார்த்தனர்; அவர் வாதித்தது ஒன்றும் பலிக்காமற் போகவே, கடைசியில், “எனக்குப் போகவேண்டுமென்று மிகவும் இஷ்டமாயிருக்கிறது. அதற்காக நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்” என்று கேட்டார். அவர் கூறிய வேறு நியாயங்களுக்கெல்லாம் பதில் கூறி வந்தேன்; இந்தக் கடைசி நியாயத்திற்கு நான் என்ன பதில் சொல்வது? மனோகரன் விஜயாளுக்குக் கூறியபடி, “என்னை வெல்வதற்கு இந்தப் பாணம் ஒன்று வைத்துக் கொண்டிருக்கிறாயே!” என்று கூறி, “நிர்வாக சபையில் இதைப்பற்றி அபிப்பிராயம் தேர்ந்தெடுக்கப் படும் பொழுது நான் இதற்கு மாறாக என் வோட் கொடுக்கவில்லை. ஆயினும் என் மனத்திலிருப்பதை மாத்திரம் கூறி விடுவேன்” என்று சொன்னேன். அதன் படியே நிர்வாக சபைக் கூட்டத்தில் இந்தப் பிரஸ்தாபம் வந்தபோது, பெங்களூருக்குப் போவதனால் எங்கள் சபைக்கு நஷ்டம்தான் கிடைக்கும் என்பதற்கு என் நியாயங்களை யெல்லாம் எடுத்துக் கூறி, கடைசியில், “இந்தப் பாரம் உங்கள் தலைமீது” என்று ஸ்பஷ்டமாய்ச் சொன்னேன். மற்றவர்களெல்லாம், “அம்மாதிரி ஒன்றும் நேரிடாது; நாம் பயப்பட வேண்டியதில்லை” என்று கூறினவர்களாய்ப் பெங்களூருக்குப் போக வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அப்படியே அங்கு போனதனால் சபைக்குச் சுமார் 800 ரூபாய்க்குமேல் நஷ்டம் உண்டாச்