பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/540

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

525




சுது. நான் சொன்னபடியே நடந்ததெனச் சந்தோஷப்பட வில்லை. நான் எண்ணியபடி நேராது, சபைக்கு லாபம் வந்திருக்குமாயின், அதிக சந்தோஷப்பட்டிருப்பேன். நான் முக்கியமாக வருத்தப்பட்டதெல்லாம், என் அனுபவத்தைக் கொண்டு நான் சபையின் நன்மைக்காகக் கூறியதை சபை யோர் கவனியாது, பிறகு கஷ்டப்பட்டார்களே என்பது தான்.

இந்த பெங்களூர்ப் பிரயாணத்தில் ஆரம்பமுதல் எல்லாம் விக்கினமாகவே யிருந்தது. தமிழில் அங்கு நாடகங்களாட வேண்டுமென்று ஆரம்பித்தவுடன், தமிழரின் தாயாதிகளான தெலுங்கர், நாங்களும் அங்கு ஒரு நாடகமாட வேண்டுமென்று ஆரம்பித்தனர்! நம்முடைய கடமையை நாம் செய்துவிட்டோம்; இனி அவர்கள் பாடென்று நான் சும்மா இருந்துவிட்டேன். நான் எண்ணியபடியே, அங்கு நாங்கள் ஆடிய ‘பிரஹ்லாதா” என்னும் தெலுங்கு நாடகத்திற்குப் பல்லாரியிலிருந்து தெலுங்கில் பிரபல ஆக்டராகிய எனது நண்பர் ராகவாச்சார்லு வந்து ஆடியும், செலவு அதிகமும் வசூல் கொஞ்சமுமாய் முடிந்தது! தமிழ் நாடகங்களுக்கும், நான் நினைத்தபடியே சரியான வசூலாக வில்லை. பணம் வசூலாகாமற் போனால் போகிறது, ஜனங்களாவது வந்து பார்க்கவேண்டுமே, அதுவும் இல்லை. ‘பட்டபின்தான் ஒரு ஜாதியார்க்குத் தெரியும்’ என்று ஒரு பழமொழியுண்டு. அதன்படி பெங்களூரில் இம்மாதிரி கஷ்டப்பட்ட பின்தான், சம்பந்தம் கூறியது சரியென அவர் களுக்குத் தோன்றியது. இங்கு நடந்த நாடகங்களில், ஒன்றைப் பற்றி நான் சில விஷயங்கள் இங்கு எழுத விரும்புகிறேன். அதாவது, “அமலாதித்யன்” என்னும் நாடகத்தைப்பற்றி.

பெங்களூரில் என்னென்ன நாடகங்கள் ஆடுவது என்கிற பேச்சு வந்த பொழுது, “அமலாதித்யன்” நாடகத்தையும் அங்கு ஆடவேண்டுமென்று சிலர் பிரேரேபித்தார்கள்; அது அவ்விடத்தில் ரமிக்காது, அவ்விடத்திலுள்ள வர்களெல்லாம் புராணக் கதைகள் முதலியன விரும்புவார்களே யொழிய, ஷேக்ஸ்பியர் நாடகங்களின் மொழி பெயர்ப்பு அங்கு ருசிக்காது என்று என் எண்ணத்தைக் கூறி ஆட்சேபித்தேன். அதன்மீது அவ்விடத்திய கன்னட நாடக சபையார்கள் சிலருக்கு எங்கள் சபையார் எழுதிக்