பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/541

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

526

நாடக மேடை நினைவுகள்




கேட்க, அவர்கள் ‘அமலாதித்யன்’ கட்டாயமாய்ப் போட வேண்டும். இவ்விடத்திலிருப்பவர்கள் அதைத்தான் பார்க்க மிகவும் விரும்புகிறார்கள் என்று பதில் எழுதியனுப்பினார்கள். அதன்பேரில் மறுபடியும் இவ்விஷயம் எங்கள் நிர்வாக சபையில் தீர்மானத்திற்கு வந்ததன் பேரில் எனது நண்பர்கள், அக்கடிதத்தைக் காட்டி, “பார்த்தாயா, நீ கூறியது தவறு. அங்குள்ளவர்களெல்லாம் இந்நாடகத்தைத் தான் முக்கியமாகப் பார்க்க விரும்புகிறார்கள் என்று பதில் வந்திருக்கிறது. ஆகவே அதை முக்கியமாகப் பெங்களூரில் ஆடவேண்டும்” என்று கூறினார்கள். “இதை முற்றிலும் நம்பாதீர்கள்; இதற்கு அர்த்தமென்ன வென்றால், இக் கடிதம் உங்களுக் கெழுதியிருக்கும் கற்றவர்களாகிய இவர்களுடைய அபிப்பிராயம் அந் நாடகத்தைப் பார்க்க வேண்டுமென்றிருக்கலாம். இதைப் பெங்களூர் ஜனங் களின் பொது அபிப்பிராயமாக நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது” என்று ஆட்சேபித்தேன். என் ஆட்சே பணை யானது செவிடன் காதில் ஊதிய சங்கநாதமாயிற்று. பிறகு அமலாதித்யன் நாடகமும் பெங்களூரில் ஆட வேண்டு மென்று தீர்மானிக்கப்பட்டது. இந்நாடகம் நடத்தப்பட்ட பொழுது, நான் எண்ணியபடியே பெங்களூரில் ஆங்கிலம் கற்றறிந்த சிலர் தவிர, மற்றப் பொது ஜனங்கள் அதிகமாக வரவில்லை. பிறகுதான் என்னை ஆட்சேபித்த எனது நண்பர்கள், நான் எண்ணியது சரியென ஒப்புக்கொண் டனர். பிறகு இவ்வாறு எழுதியனுப்பிய பெங்களூர் சபை அங்கத்தினருடன் நான் கலந்து பேசி, ‘ஏன் இப்படி எழுதியனுப்பினீர்கள்?’ என்று மெல்ல விசாரித்தபொழுது, அவர்கள் பல்லாரி ராகவாச்சார்லுவிடமிருந்து இந்த அமலாத்த்யன் பாத்திரத்தை நான் மிகவும் நன்றாக ஆடுவதற்காகக் கேள்விப்பட்டதாயும், ஆகவே, அவர்கள் அதைப் பார்க்க வேண்டுமென்று மிகவும் விரும்பினதாயும், அதற்காக அவ்வாறு எங்கள் சபைக்கு எழுதியனுப்பிய தாகவும் ஒப்புக்கொண்டனர்.

இங்கு நடத்திய இந்நாடகத்தில் இன்னொரு விசேஷ மென்னவென்றால், நான் நாடகமாட ஆரம்பித்தது முதல் செய்திராத பெரும். பிழையொன்றை இழைத்தேன்! ஈதாகும் அது:- ஐயங்கார் அன்றைத் தினம் வழக்கப்படி, இந் நாடகத்தில், நாடகத்துள் நாடகமாடிய காட்சியில்,