பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/544

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

529




நாடகங்களிலும், முதல் நாடகத்தைவிட இரண்டாவது நாடகத்திலும், இரண்டாவது நாடகத்தைவிட மூன்றாவது நாடகத்திலும் இவ்வாறு படிப்படியாக ஜனங்கள் அதிகமாய் வர ஆரம்பித்தனர். இதை நான் மாயவரவாசிகள் எங்கள் சபைக்குச் செய்த நன் மதிப்பாகக் கொள்கிறேன். இந்த ஆறு நாடகங்களிலும் எங்கள் செலவு போக சபைக்குக் கொஞ்சம் லாபமே கிடைத்தது. இந்த ஆறு நாடகங்களைப் பற்றி எனது நண்பர்களுக்கு நான் தெரிவிக்க வேண்டிய முக்கியமான விஷயம் எனக்கு ஒன்றும் ஞாபகமில்லை. கடைசியாக, ஏழாவது நாடகமாக வைத்துக்கொண்ட நந்தனார் நாடகத்தைப் பற்றி மாத்திரம் கொஞ்சம் எழுத வேண்டியவனாயிருக்கிறேன்.

இந்த நந்தனார் நாடகத்தில் ஒரு முக்கிய வேடம் பூண்ட எனது நண்பர்களிலொருவர் (அவர் பெயரை இங்கு எழுத எனக்கிஷ்டமில்லை) “அந்த நாடகத்திற்குத்தான் அதிக வரும்படி வரும்” என்று கொஞ்சம் வீம்பு பேசிக்கொண்டிருந்தார். முதன் முறை இங்கு இந் நாடகம் ஆடிய பொழுது, மற்ற நாடகங்களைவிட இதற்குக் குறைவாக ஜனங்கள் வந்தனர். அதன்பேரில் சிலர் அவரை ஏளனம் செய்ய, அம்முறை ஜனங்கள் வராததற்கு ஏதோ போக்குகள் சொல்லி, மறுமுறை மாத்திரம் ஆடுவதானால், சுற்றுப்பக்கங்களிலுள்ள எல்லா மிராசுதாரர்களும் தான் ஆடுவதைப் பார்க்கக் கட்டாயமாய் வருவார்கள்; இந் நாடகம் இவ்வளவு நன்றாய் நடிக்கப்படும் என்று அவர்களுக்குத் தெரியாமற் போயிற்று; இப்பொழுது அவர்களில் சிலர் ஒரு முறை இதைப் பார்த்திருப்பதால், இரண்டாம் முறை எல்லோரையும் அழைத்துக்கொண்டு வருவார்கள்” என்று கூறினார். அதன் பேரில் எங்கள் நிர்வாக சபைக் கூட்டத்தில், இன்னொரு நாடகமிங்கு ஆடலாமா என்ற பேச்சு வந்தபொழுது, நந்தனாரை மறுபடியும் ஆடவேண்டும் என்று வற்புறுத்தினார். எனக்கு மாத்திரம் மிகவும் சந்தேகமாயிருந்தது; இருந்தபோதிலும், இதற்கு ஆட்சேபித்தால் இந் நாடகத்தில் இவனுக்கு முக்கியமான பாத்திரம் ஒன்றுமில்லையென்று ஆட்சேபிக் கிறான் என்று எங்கு மற்றவர்கள் எண்ணிக் கொள்ளுகிறார் களோ என்று பயந்தவனாய் ஆட்சேபியாது விட்டேன். எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு மாத்திரம் மற்றவர்கள்