பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/546

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

531





பற்றி அதிகமாய்ப் புகழ்ந்து பேசியதை நான் கேட்ட தில்லை. நான் இதை, நாம் ஆடும் நாடகத்தைப்பற்றி நாமே புகழ்ந்து பேசிக்கொள்ளக் கூடாது என்னும் புத்திமதியாகக் கொண்டேன்.

மேற் சொன்னபடி இரண்டாம் முறை நந்தனார் சரித்திரத்தை இவ்விடம் ஆடியதனால், அதுவரையில் வந்த கொஞ்ச லாபமும் போய்விட்டது. மாயவரத்தில் நடந்த நாடகங்களினால், நாங்கள் எடுத்துக் கொண்ட சிரமத்திற்கு லாபமாய் முடிந்தது. ஆயினும் மாயவரத்திலும் நாங்கள் போய் வந்த பிறகு எங்கள் சபையைப் போன்ற சபையொன்று ஸ்தாபிக்கப்பட்டது ஒரு லாபமாகக் கொள்ள வேண்டும்.

இவ் வருஷம் எனது தமயனார் ப. ஆறுமுக முதலியாரின் உருவப்படம் எங்கள் சபையில் திறந்து வைக்கப்பட்டது. அன்றியும் இவ்வருஷம் எங்கள் சபையின் தெலுங்குப் பிரிவினர் வெங்கடாசல ஐயர் எழுதிய “விதி லேக வயித்தியுடு” என்னும் தெலுங்கு நாடகத்தை ஆடினர். இது “மாலியர்” என்னும் பிரஞ்சு நாடகாசிரியர் எழுதிய ஒரு நாடகத்தின் மொழி பெயர்ப்பாகும்.

இனி எங்கள் சபையில் 1918ஆம் வருஷம் நடந்த நிகழ்ச்சிகளைப்பற்றி எழுதுகிறேன்.

இவ் வருஷ ஆரம்பத்தில் எங்கள் சபையில் கன்னடப் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. ஆகவே, இது முதல் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், சம்ஸ்கிருதம், கன்னடம் ஆகிய ஐந்து பிரிவுகளும் நாடகங்களாடத் தலைப்பட்டன. இவ்வருஷம் எங்கள் சபையின் இரண்டு முக்கிய ஆக்டர் களாகிய டி.எஸ். நாராயண சாஸ்திரியார் பி. ஏ. பி. எல்., எம். துரைசாமி ஐயங்கார் இருவரும் காலகதியடைந்தனர்; இச் சம்பவத்தினால் என்னுடைய அன்யோன்ய நண்பர் களில் இருவரை நான் இழந்தேன். முன் கூறிய நாராயண சாஸ்திரியார் சம்ஸ்கிருத பாஷையில் மிகவும் பாண்டித்ய முடையவர். “சங்கரருடைய காலம்” என்னும் அரிய பெரிய கிரந்தத்தை ஆரம்பித்து அதை முடிக்காமலே தேக வியோகமானது, அப் பாஷாபிமானிகளெல்லாம் துக்கப்பட வேண்டிய விஷயமே. இவருக்கு நாடகங்கள் எழுது