பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/547

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

532

நாடக மேடை நினைவுகள்




வதிலும், நாடகங்களாடுவதிலும் மிகவும் பிரீதி. இவர் எழுதியுள்ள இரண்டு நாடகங்களைப்பற்றி. முன்பே நான் எனது நண்பர்களுக்குத் தெரிவித்திருக்கிறேன். சுகுண விலாச சபை ஸ்தாபித்த நான்கைந்து வருடங்களுக் கெல்லாம் எங்கள் சபையைச் சேர்ந்த போதிலும், ஏதோ காரணத்தினால், எங்களை விட்டு விலகி, “வித்வன் மனோரஞ்சனி” என்னும் நாடகச் சபையை ஸ்தாபித்தார். சில வருஷங்கள் அச் சபையானது நாடகங்களை நடத்திய போதிலும்; அது சீக்கிரத்தில் நசித்து விட்டது. அதை மறுபடியும் இரண்டொரு சமயம் உத்தாரணம் பண்ணிப் பார்த்தார். ஆயினும் அது பயன்படாமற் போச்சுது. இவர் நாடக மேடையின்மீது தரித்த வேடங்களுக்குள் எல்லாம் ‘பிரதாபருத்ரீயம்’ என்னும் தெலுங்கு நாடகத்தில், யௌகந்தரராகத் தோன்றியதுதான் மிகவும் நன்றாயிருந்த தென்பது என் அபிப்பிராயம்.

இவ்வருஷம் கிறிஸ்ட்மஸ் விடுமுறையில் எங்கள் சபையார் 22 நாடகங்கள் ஆடியது கவனிக்கத்தக்க விஷயம். இத்தனை நாடகங்களை தினம் ஒன்றாக ஆடியது சிலாகிக்கத் தக்கதாயிருந்தபோதிலும், ஆக்டர்களுக்கு அது மிகவும் சிரமத்தைத் தந்தது என்பதற்குச் சந்தேகமில்லை. இவற்றுள் பெரும்பாலும் தமிழ் நாடகங்களாயிருந்தபடியால், எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுக்கும், எனக்கும் மிகவும் கஷ்டமாகத்தானிருந்தது. இவைகளெல்லாம் இரவில் 9 மணிக்குமேல் ஆடவேண்டிய நாடகங்களாயிருந் ததால், இவற்றை ஆடுவதே அசாத்தியமாயிருந்திருக்கும்; சாயங் காலத்தில் ஐந்து மணிக்கு ஆரம்பித்து 9 மணிக் குள்ளாக முடித்தபடியால், அவ்வளவு கஷ்டமில்லாம லிருந்தது.

இவ்வருஷம், சென்ற நான்கு வருடங்களாக உலக முழுவதையும் கலக்கிக் கொண்டிருந்த ஐரோப்பிய யுத்தமானது தெய்வகடாட்சத்தினால் முற்றுப்பெற்றபடியால், எங்கள் சபையில் நவம்பர் மாதம் 17 ஆம் தேதி ஏறக்குறைய 1000 பெயர்ருக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கினோம். சபையில் அன்று சாயங்காலம் ஒரு பொதுக் கூட்டம் கூடி மகிழ்ச்சி கொண்டாடினோம்.

எங்கள் சபையோர் இவ்வருஷம் நடத்திய நாடகங்களில் குறிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், ஒரே