பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/549

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

534

நாடக மேடை நினைவுகள்





மணியராக நடிக்கும்படி ஏற்பாடாயிருந்தது. நாடகத் தினம் மத்தியானம் இரண்டு மணிக்கு அவர் 104 டிகிரி ஜுரமாயிருக்கிறது; இன்று ஆடச் சொன்னால் ஆடுகிறேன். வேறு ஏற்பாடு செய்ய முடியுமானால் நலமாயிருக்கும்” என்று சொன்னார். அதன்மீது அவரை அந்தத் திசையில் ஆடச்சொல்வது குரூரமாகுமென எண்ணி, உடனே எனது நண்பர் ச. ராகவாச்சாரியாருக்கு டெலிபோன் செய்து அவரை எடுத்துக்கொள்ளும்படி செய்தேன். அவரும் ஒப்புக்கொண்டு இரண்டு மூன்று மணிக்குள் அந்தப் பாத்திரத்தின் பாகத்தைப் படித்து மேடையின்மீது நடித்து எங்கள் சபையின் பெயரைக் காப்பாற்றினார். இவருடைய அபாரமான ஞாபக சக்தி மிகவும் மெச்சத்தக்கது.

மறு வருஷமாகிய 1920ஆம் ஆண்டு எங்கள் சபையின் சரிதையில் ஒரு முக்கியமான வருஷமாகும். அதற்கு அநேகக் காரணங்கள் உண்டு. முதலாவது இவ்வருடம் எங்கள் சபையின் 500ஆவது நாடகம் பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி நடத்தப்பட்டது. அன்று, சென்னை கவர்னர் லார்டு வில்லிங்டன் அவர்களும் அவரது மனைவியார் லேடி வில்லிங்டனும் விஜயம் செய்தனர். அவர்களெதிரில் மனோஹரன் நாடகத்திலிருந்து தமிழில் சில காட்சிகளும், ராமராஜு எனும் தெலுங்கு நாடகத்திலிருந்து சில காட்சிகளும், ஆங்கிலத்தில் எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் எழுதிய சர்ஜன் ஜெனரல்ஸ் பிரிஸ்கிரிப்ஷன் எனும் சிறு நாடகமும் நடத்தப்பட்டன. அச்சமயம் இன்னின்ன பாஷையில் இத்தனை நாடகங்கள் நடத்தப்பட்டன, இன்னின்ன தர்மங்கள் சபையோரால் செய்யப்பட்டன, சபையின் அங்கத்தினர் இத்தனை பெயர், சபை இன்னின்ன ஊர்களுக்குப் போய் நாடகமாடியிருக்கிறது, இன்னின்ன மஹாராஜாக்கள் கவர்னர்கள் முன்னிலையில் நாடகமாடியிருக்கிறது முதலிய குறிப்புகளடங்கிய ஒரு சிறு பத்திரிகை வந்தவர்களுக்கெல்லாம் கொடுக்கப்பட்டது.

இவ் வருஷம் எங்கள் சபையானது, லிடரெரி அண்டு சைன்டிபிக் சொஸைடீஸ் ஆக்டின்படி ரெஜிஸ்டர் செய்யப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டு, பிறகு அவ்வாறே ரிஜிஸ்டர் செய்யப்பட்டது. இதற்கு முக்கியக் காரணம், கட்டட பண்டைப் பாதுகாப்பதற்கும், சபை