பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/550

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

535





யானது நாடக சாலையையும் இருப்பிடத்தையும் நிர் மாணிப்பதற்கு நிலம் முதலிய விக்கிரயம் வாங்குதவற்கும், இப்படிச் செய்தல் அதிஅவசியமெனக் கருதப்பட்டதேயாம்.

இவ் வருஷமானது எங்கள் சபைக்கு ஒரு முக்கியமான வருஷம் என்று நான் முன்னே கூறியதற்கு மற்றாரு காரணம், இவ்வாண்டில் எங்கள் சபையானது சேலம், கோயமுத்தூர் இரண்டு இடங்களுக்கும் போய் நாடகங்களாடி நற்பெயர் பெற்றதாம். ஆக்டர்களெல்லாம் மே மாதம் 27ஆம் தேதி புறப்பட்டுப் போய் ஜூன் மாதம் 23ஆம் தேதி சென்னை வந்து சேர்ந்தோம். முன் வருஷம் பெங்களூருக்குப் போய் நஷ்டமடைந்தபடியால், இம் முறை அப்படிப்பட்ட கஷ்டம் நேராதிருக்க வேண்டு மென்று, சபையின் பொதுக் கூட்டத்தில் நாடகத்தின் வரும்படியைக் கண்டிராக்டாக விட வேண்டுமென்று ஆலோசிக்கப்பட்டு, எங்கள் அங்கத்தினரின் ஒருவராகிய டி.சி. வடிவேலு நாயகர் என்பவர், எல்லாச் செலவும் போக, சபைக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகக் கூற, அது ஒப்புக் கொள்ளப்பட்டது. இவ்வாறு எங்கள் சபை கண்டிராக்டாக நாடகமாடுவது உசிதமாக எனக்குத் தோன்றாவிட்டாலும், வடிவேலு நாயக்கர் எங்கள் சபையின் அங்கத்தினராயிருந் படியாலும், அவர்மீது எனக்கு எங்கள் சபையின் ஆக்டர்களின் சௌகர்யங்களையெல்லாம் சரியாகக் கவனிப்பார் என்று பூர்ண நம்பிக்கையிருந்தபடியாலும், ஏதாவது லாபம் கிடைத்தால் அவருக்குத்தானே சேரப்போகிறது என்கிற எண்ணத்தினாலும் இதற்கு நான் இசைந்தேன். இவ்வருஷம் தமிழ் கண்டக்டராயிருந்த எனது நண்பர் ச. ராகவாச்சாரியார், வெளியூர்களுக்கு வருவது முடியாமையாயிருந்தபடியால், நிர்வாக சபையார் என்னை இவ்வெளியூர் நாடகங்களுக்குக் “கண்டக்டர் இன்சார்ஜ்” ஆக நியமித்தனர்.

எங்கள் சபையானது வெளியூர்களுக்குப் போய் நாடக மாடியதில், சேலம் கோயமுத்தூரில் ஆடிய நாடகங்கள்தான் எங்கள் சபைக்கு மிகுந்த கீர்த்தியையும், சந்தோஷத்தையும் கொடுத்தபடியால், இதைப்பற்றிச் சற்று விரிவாக எழுதப் போகிறேன். முதலில், மற்ற ஊர்களுக்குப் போகும் போதெல்லாம், எப்படி முடியுமோ சபைக்கு லாபம்