பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/551

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

536

நாடக மேடை நினைவுகள்




வருமோ நஷ்டம் வருமோ என்றிருந்த சந்தேகம், இம்முறை இல்லாதிருந்தது. சென்னையை விட்டுப் புறப்படு முன்னமே எங்கள் சபையின் இரும்புப் பெட்டியில் ரூபாய் 1000 வந்து சேர்ந்துவிட்டது. ஆகவே, பணத்தைப்பற்றி எங்களுக்குக் கவலையென்பதில்லாமற் போயிற்று. சேலம் கோயமுத்தூர் நாடகங்களைப் பற்றி நான் நினைக்கும் போதெல்லாம், இன்னும் என் மனத்தில் சந்துஷ்டியுண்டா வதற்கு இரண்டாவது காரணம், எனது நண்பர் வடிவேலு நாயக்கர் இந்த இரண்டு ஊர்களிலும் எங்களுக்கு வேண்டிய சௌகர்யங்களை யெல்லாம் மிகவும் சிரத்தையோடும் விமரிசையோடும் செய்ததே. இவர் வெளியூர்களில் கன்னையா கம்பெனி நாடகங்களாடும்போது பன்முறை சென்று பழக்கப்பட்டிருந்தபடியால், முன்னதாக விளம்பரம் செய்வதிலும், துண்டுப் பத்திரிகைகள் முதலியன அக்கம்பக்கங்களில் பிரசுரம் செய்வதிலும், இன்னும் நாடகங்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளனைத்தும் செய்வதிலும் மிகவும் பாண்டித்ய மடைந்திருந்தார். அது எங்களுக்கு மிகவும் உபயோகப்பட்டது. இம்முறை இவ்விரண்டு ஊர்களிலும், நாங்கள் போய்ச் சேர்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே நாடகாபிமானிகள் ஒருவரும் பாக்கியில்லாதபடி எங்கள் சபை வருவதைப்பற்றியும் இன்னின்ன நாடகங்கள் போடப்போகிறார்கள் என்பதைப் பற்றியும் அறியும்படி, எங்கு பார்த்தாலும், சுவரில் ஒட்டும் பெரிய நோட்டீஸ்களை ஒட்டி ஏற்பாடு செய்தனர். அன்றியும் கைத்துண்டு நோட்டீஸ்கள் ஏராளமாக அச்சிட்டு வீட்டுக்கு வீடு கொடுக்கும்படி ஏற்பாடு செய்தனர். அன்றியும் நாடகத் தினத்தில் அக்கம் பக்கங்களிலுள்ள கிராமாந்தரங்களிலெல்லாம், மோட்டார் பஸ் மூலமாக நோட்டீஸ்கள் பரவச் செய்தனர். இதன் பலனாக, நாங்கள் இவ்விரண்டு ஊர்களிலும் நடத்திய நாடகங்களுக்கு ஏறக்குறைய ஒவ்வொரு தினமும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூலாயிற்று என்பதற்குச் சந்தேகமில்லை. கொழும்பு, யாழ்ப்பாணத்தில் கூட இம்மாதிரியான வரும்படி வந்ததில்லை. அவ்விடங்களிலெல்லாம் முக்கியமாக சனிக்கிழமை நாடகங்களுக்குத்தான் அதிக வரும்படி வரும். மற்ற செவ்வாய் வியாழன் நாடகங்களுக்குக் கொஞ்சம் குறைவாக வரும். சேலம் கோயமுத்தூர் நாடகங்களில், தினம்