பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/552

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

537





அதிக வரும்படி வந்தது எனக்கும் சந்தோ, நத்தைத் தந்தது; எங்கள் சபையோருக்கும் சந்தோஷத்தைத் தந்திருக்க வேண்டும். இவ்விரண்டு ஊர்களிலும் செலவைக் கருதாது எங்கள் சௌகர்யத்தையே கருதி, ஏராளமாகச் செலவு செய்தும், எங்களுக்கெல்லம் இரண்டாவது வகுப்பு ரெயில் செலவு கொட்டகைச் செலவு முதலியன அதிகமாக ஆகியும் எங்கள் சபைக்கு 1000 ரூபாய் கொடுத்தும், எல்லாச் செலவும் போக, நிகரமாக 3500 ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்ததாக அவரே என்னிடம் ஒப்புக்கொண்டிருக் கிறார். அவர் எங்களுக்காக எடுத்துக் கொண்ட கஷ்டத்திற் காக இன்னும் அவருக்கு அதிக லாபம் கிடைத்திருக்கலாகாதா என்று எண்ணினோமேயொழிய, இவ்வளவு லாபம் கிடைத்ததே என்று எங்கள் ஆக்டர்களில் ஒருவரும் பொறாமைப்படவில்லை.

இனி சேலத்தில் நிகழ்ந்த வரலாறுகளை எனக்கு ஞாபகம் இருக்கும் வரையில் எனது நண்பர்களுக்கும் தெரியப்படுத்துகிறேன். எனது ஆக்டர்களுடன் சேலத்திற்கு அதிகாலையில் போய்ச் சேர்ந்தது, ரெயில் ஸ்டேஷனிலிருந்து, நாங்களெல்லாம் எங்கள் விடுதியாகிய சேலம் காலேஜ் ஹாஸ்டலுக்குப் போய்ச் சேர்ந்தது, சென்னையில் சாதாரணமாகக் கிடைப்பதைவிட, அங்கு நாங்கள் காலையில் சாப்பிட்ட பட்சணம் நன்றாயிருந்தது. நாங்கள் போய்ச் சேர்ந்த தினம் மழை பெய்தது; மழை நின்றவுடன், நானும் எனதாருயிர் நண்பரும் அவ்வூரிலிருக்கும், கன்னிகா பரமேஸ்வரி கோயிலுக்குப் போனது, நாங்கள் எங்களை ஒருவரும் இங்கு கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று எண்ணியிருக்க, அக்கோயில் அதிகாரிகள் எங்களை சுகுண விலாச சபையைச் சேர்தந்தவர்களென்று எப்படியோ கண்டறிந்து எங்களுக்கு மரியாதை செய்தது, ஒருநாள் இரவு நாடகமானவுடன், நாங்களெல்லாம் உட்கார்ந்து நிலாச் சாப்பாடு சாப்பிட்டது, பனைமரத்தொட்டி என்னும் ஊருக்குப் போனது, இம்மாதிரியான எத்தனையோ விஷயங்கள் நேற்று நடந்ததுபோல் என் நினைவிற்கு வருகின்றன! அன்றியும் இவ்வூரிலுள்ள பெரிய மனிதர் களெல்லாம் எங்கள் சபையோரை மிகவும் அன்புடன் வரவேற்று உபசரித்தனர். கொழும்புவிலும் யாழ்ப்பாணத்திலும் எப்படி எங்கள்மீது அன்பு பாராட்டினரோ அப்படி