பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/553

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

538

நாடக மேடை நினைவுகள்




இவ்விடமும் பாராட்டினார்கள். இவ்வூரிலுள்ள கற்றறிந்த பெரிய மனிதர்கள் மாத்திரம் அல்ல, எங்கள் நாடகங்களைக் கண்டு களித்த சாதாரண ஜனங்களும் எங்கள் ஆக்டர்கள் மீது பிரியத்தைக் காட்டினர். இதற்கு ஓர் உதாரணத்தைப் பிறகு எழுதுகிறேன்.

இது நடந்து இப்போது 14 வருடங்களாகிறது. இருந்தும், இவ்வருஷம் இரண்டு முறை (முதன்முறை மதுவிலக்குக் பிரசார சம்பந்தமாக சென்னை பப்ளிசிடி கமிட்டி அக்கிராசனாதிபதியாகவும், இரண்டாம் முறை கோஆபரேடிவ் சொசைட்டிகளின் டிபுடி ரிஜிஸ்டிராராகவும் எனதுயிர் நண்பர் கே. நாகரத்தின ஐயர் அவர்களைப் பார்ப் பதற்கும்) நான் போயிருந்தபொழுது, எங்கள் சபையின் நாடகங்களைப் பார்த்த பல பெரிய மனிதர்கள், ‘மறுபடியும் எப்பொழுது உங்கள் சபையுடன் வரப் போகிறீர்கள்’ என்று கேட்டனர்; நானும் முதன்முமுறை சபையுடன் வந்தபோது பார்த்துச் சந்தோஷித்த கோயில் முதலிய இடங்களுக்கெல்லாம் மறுபடியும் போய்ப் பார்த்துச் சந்தோஷப்பட்டேன். ஆயினும் அம்முறை பார்த்தபொழுது என் பக்கலிலிருந்து அவைகளையெல்லாம் அனுபவித்த எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு என்னுடன் இல்லையே என்னும் துக்கம் அதிகமாயிருந்தது.

இருந்தபோதிலும், அவருக்குப் பதிலாக நாகரத்தினம் ஐயராகிய மற்றொரு நண்பனையாவது பரமேஸ்வரன் தன் கருணையினால் என் பக்கலிலிருக்கும் படி அருளினரே என்று கொஞ்சம் என் மனத்தைத் தேற்றிக்கொண்டேன்.

இந்த சேலம் பிரயாணத்தில், எங்களுக்குக் கஷ்டங்கள் நேரிடாமற் போகவில்லை . அநேக விஷயங்களில் ஆரம்பத்தில் ஏதாவது கஷ்டம் நேரிட்டால்தான், பிறகு அவை முடிவில் சுகமாய் முடிவது என்னளவில் அனுபவம் என்பதை, இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு முன்பே தெரிவித்திருக்கிறேன். இந்த சேலம் கோயமுத்தூர் பிராயணத்திலும் அங்ஙனமே நேர்ந்தது. இப்பிராயணத்தைப் பற்றி எங்கள் நிர்வாக சபையில் தீர்மானமாவுடன் தெலுங்குப் பிரிவினர்கள் தாங்களும் இவ்விடங்களில் நாடகங்கள் ஆட வேண்டும் என்று வாதிக்க ஆரம்பித்தனர். இவ்விடங்களில் தமிழ் நாடகங்கள்தான் சபைக்கு லாபம்