பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/554

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

539




உண்டாக்கும், தெலுங்கு பிரயோஜனமில்லை என்று நான் எவ்வளவு வற்புறுத்தியும் கேளாமற் போயினர். சரி, ஆனால் உங்களிஷ்டம் என்று விட்டு விட்டேன். ஆயினும் வெளியூர் நடவடிக்கைகளைப் பற்றி அதிக அனுபோக முடைய வடிவேலு நாயக்கர் தான் கண்டிராக்டராக ஒப்புக் கொண்டது தமிழ் நாடகங்களுக்கேயென்றும், தெலுங்கு நாடகங்களின் பொறுப்பை ஒப்புக் கொள்ளமாட்டேன் என்றும் கண்டிப்பாய்ச் சொல்லி விட்டார். அதன் பேரில் சபையின் செலவிலேயே இரண்டு தெலுங்கு நாடகங்கள் கோயமுத்தூரில் மாத்திரம் ஆட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு ஆரம்பத்திலேயே இந்த ஆட்சேபணை வந்தது ஒருவிதத்தில் எனக்குச் சந்தோஷத் தையே தந்தது. ஏனெனில் என் கோட்பாட்டின் பிரகாரம், இந்தப் பிரயாணம் மிகவும் சந்தோஷகரமாய் முடிவு பெறுமெனத் தீர்மானித்தேன். இந்த இரண்டு தெலுங்கு நாடகங்களைப்பற்றிக் கோயமுத்தூர் சமாச்சாரம் வரும் பொழுது எழுதுகிறேன்.

சேலத்திற்கு ரெயிலேறிப் புறப்படும் சாயங்காலம் இன்னொரு கஷ்டம் நேரிட்டது. அங்கு ஆடத் தீர்மானித்த முதல் நாடகமாகிய ‘மனோஹரன்’ எனும் நாடகத்தில் முக்கிய ஸ்திரீ பாகமாகிய பத்மாவதி வேடம் தரிக்க வேண்டிய பத்மநாபராவ், ரெயில் ஸ்டேஷனுக்கு வந்து தான் எங்களுடன் சேலத்திற்கு வர முடியாதென்று தெரிவித் தார். அவர்மீது குற்றமில்லை. அவரும் அறியாதபடி ஏதோ அசந்தர்ப்பம் நேரிட்டது. இரண்டு நாட்கள் முன்னதாகத் தெரிந்திருந்தாலும் வேறு யாரையாவது ஏற்பாடு செய்யலாம். இப்போழுது என்ன செய்வது என்று யோசித்தவனாய், ஸ்வாமி இருக்கிறார் பார்த்துக்கொள்வோம் என்று புறப்பட்டுப் போனேன். சேலம் போய்ச் சேர்ந்ததும் எனக்கு ஒரு யோசனை பிறந்தது. எம். தேசிகாச்சாரியார் என்னும் வேறொரு ஆக்டரை, அன்று சாயங்கால ரயிலில் கட்டாயமாய்ப் புறப்பட்டு வரும்படி தந்தி அனுப்பினேன். தெய்வாதீனமாய் அவர் அப்படியே புறப்பட்டு நாடகத் தினம் காலை வந்து சேர்ந்தார். அவருக்கு ஒருமுறை பத்மாவதியின் பாகத்தைப் படித்துக் காட்டி உங்களாலானது பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். அவரும் வெகு சிரத்தையோடு, வேறொன்றையும் கவனிக்காமல்,