பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/555

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

540

நாடக மேடை நினைவுகள்




அந்தப் பாகத்தைக் குருட்டுப்பாடம் செய்து அன்றிரவு மிகவும் நன்றாக நடித்தார். அவ்வாறு சமயத்திற்குக் கைகொடுக்கும் ஆக்டர்கள் பலர் எனக்கு உதவியாக இருந்தபடியால், அக்காலங்களிளெல்லாம் நான் எடுத்த காரியத்தை விடாமல் பூர்த்தி செய்யும்படியான சக்தி இறைவன் அருளால் எனக்கு இருந்தது. தற்காலத்தில் அநேக சபைகளில் ஒரு நாடகத்தில் ஒரு முக்கிய ஆக்டருக்கு ஏதாவது அசந்தர்ப்பம் நேரிட்டால், அந்நாடகத்தையே விட்டுவிடும்படி நேரிட்டிருக்கிறதைப் பன்முறை பார்த்திருக்கிறேன். கூடுமானவரையில், சந்தர்ப்பங்கள் வாய்க்கும் பொழுது, எந்தப் பாத்திரத்தையும், க்ஷணத்தில் எடுத்துக் கொள்ளும்படியான ஆக்டர்களை உடைத்தாயிருப்பது ஒரு சபை செய்த பாக்கியமெனவே கருத வேண்டும்.

நாங்கள் சேலத்தில் நாடகம் ஆடிய நாடக சாலைக்கு அப்பொழுது சேலம் எலெக்ட்ரிக் தியேடர் என்று பெயர் இருந்தது. இந் நாடகசாலை எங்களுக்கு மிகவும் சௌகர்யமாக, நாங்கள் இறங்கியிருந்த பெரிய கட்டிடத்திற்கு எதிரிலேயே இருந்தது. எங்கள் வழக்கப்படி நாடகத் தினம் சாயங்காலம் 5 மணிக்கெல்லாம் வீட்டில் சாப்பிட்டுவிட்டு, நாடக சாலைக்குப் போய் வேஷம் தரித்துக்கொண்டோம். நாடகம் ஆரம்பமாவதற்கு அரைமணிக்கு முன்பாகவே நாடக சாலை நிரம்பிப்போன விஷயம் அங்கு வந்தவர்களின் கூச்சலினால் அறிந்து சந்தோஷப்பட்டேன். எனக்கு முக்கியமாகவிருந்த சந்தோஷம் என்னவென்றால், நம்மை நம்பி வடிவேலு நாயகர், அதிகப் பணம் செலவழித்திருக்கிறார். ஒருவேளை வசூல் அதிகமாயாகாது அவருக்கு நஷ்டம் வந்தால் என்ன செய்வது என்கிற என் சந்தேகம் நிவர்த்தியானதேயாம். இந்தச் சந்தோஷத்துடன் நாடகத்தை ஆரம்பம் செய்ததும், எனது வார்த்தைகளில் சிலவற்றை நான் பேசியதும், நாடக சாலைகளிலிருந்த விளக்குகள் எல்லாம் ஒரே விசையாக அவிந்துபோய்விட்டன! இரண்டு மூன்று நிமிஷங்கள் நாடகசாலை முழுவதும் ஒரே இருட்டாக விருந்தது. அம்மட்டும் நாடகம் பார்க்க வந்த ஏராளமான ஸ்திரீ புருஷர்கள், பயமின்றித் தங்கள் இடங்களிலேயே பேசாதிருந்தனர். ஏதாவது கொஞ்சம் காபராவாகியிருந்த போதிலும் கஷ்டமாய் முடிந்திருக்கும். உடனே வெளியிலிருந்து ஒரு வாஷிங்டன் விளக்கை மேடையின் மீது