பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/556

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

541




கொண்டு வந்து வைக்கும்படி ஏற்பாடு செய்தார் வடிவேலு நாயக்கர். இதென்னடா, ஆரம்பத்திலேயே இந்த அசகுனம் என்று என் பக்கலிலிருந்த சில ஆக்டர்கள் வருத்தப் பட்டனர். ஸ்வாமியிருக்கிறார் இதற்கெல்லாம், பயப்படாதீர்கள் என்று சொல்லி, தேற்றிக் கொண்டே யிருக்கும் பொழுது தெய்வாதீனத்தால் எலெக்டிரிக் விளக்குகளெல்லாம் மறுபடி எரிய ஆரம்பித்தன. ஈஸ்வரன் கருணையென்று நினைத்து நாடகத்தை நடத்திக் கொண்டு போனோம். இதை முக்கியமாக இங்கு எழுதியதற்கு ஒரு காரணமுண்டு. மின்சார விளக்குகளை உடைய நாடக சாலைகளிலெல்லாம் இம்மாதிரியான இக்கட்டுகள் அடிக்கடி சம்பவிக்கலாம். வாஷிங்டன் லைட் முதலிய விளக்குகளை உடைய சாலைகளில், ஒன்று திடீரென்று அணைந்து போனாலும் மற்றவை எல்லாம் எரியும். இந்த எலெக்டிரிக் விளக்குகளுள்ள நாடக சாலைகளில், ஒன்று போனால் எல்லாம் அடியோடு அவிந்து போகும். ஆகவே, நாடகத்திற்கு இடைஞ்சல் இல்லாதபடியும், அத் தருணங்களில் ஜனங்கள் பயப்படாமலிருக்கும்படியும், எலெக்டிரிக் விளக்குகளுள்ள நாடக சாலையில் ஆடும்பொழுதெல்லாம் கையோடு இரண்டு வாஷிங்டன் விளக்குகள் வைத்திருப்பது அதி அவசியம் என்று நாடகமாட விரும்பும் எனது இளைய நண்பர்கள் அறியும் பொருட்டே இதை எழுதலானேன். மேற்சொன்ன சம்பவம் நேர்ந்த பிறகு எங்கள் சபை எங்கு நாடகமாடினாலும், இரண்டொரு வாஷிங்டன் விளக்குகள் கையிருப்பாக இல்லாமல் ஆடுவதில்லை சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஆடும்பொழுதும் இம்மாதிரி யான கஷ்டம் நேர்ந்திருக்கிறது. வெளியூர்களில் கேட் பானேன்? ஆகவே மேற்சொன்னபடி முன் ஜாக்கிரதையாக இருப்பது அதி அவசியமாகும்.

இவ்விடத்தில் நாங்கள் ஆடிய முதல் மூன்று நாடகங்களாகிய மனோஹரன், சாரங்கதரன், லீலாவதி சுலோசனா நாடகங்களுக்கு நல்ல வசூலாயிற்று; நாடகங்கள் நன்றா யிருந்தனவென்று சேலம் நாடகாபிமானிகள் புகழ்ந்தனர். இந்த மூன்று நாடகங்களிலும் மிக்க நல்ல பெயர் எடுத்தவர் எனதாருயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலுவே. இவ்வாறு நான் கூறியது அவரிடத்திலிருந்த என் சிநேக வாஞ்சையா லன்று; இது வாஸ்தவம் என்று ஒரு சிறு விஷயத்தைக்