பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/557

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

542

நாடக மேடை நினைவுகள்





கொண்டு நிரூபிக்க விரும்புகிறேன். நான்காவது நாடக மாகிய நந்தனார் நாடகத்திற்கு விளம்பரங்கள் அச்சிட வேண்டி வந்தபொழுது, வடிவேலு நாயகர் என்னிடம் வந்து, “ரங்கவடிவேலுவுக்கு நந்தனார் நாடகத்தில் ஒரு பாகமுமில்லை. அவர் பெயர் நோடீஸ்களில் இருந்தால் தான் வசூலதிகமாக ஆகும் என்று எல்லோரும் இங்கு சொல்கிறார்கள். எப்படியாவது அவரை நந்தனார் நாடகத்தில் ஏதாவது பாத்திரமாக வரச் சொல்லுங்கள்” என்று வற்புறுத்தினர். இதென்னடா தர்மசங்கடம் என்று, ரங்கவடிவேலுவுடன் கலந்து பேசி, ரங்கவடிவேலுவை நர்த்தனம் செய்ய ஏற்பாடு செய்து, அதற்காகக் கதையைக் கொஞ்சம் மாற்றி, வேதியர் வீட்டில் அவர் பெண் ருதுவானதற்காக ஏதோ கச்சேரி வைப்பதாக ஏற்பாடு செய்து, அதில் நடனமாதாக ஆடுவதாக ரங்கவடிவேலுவின் பெயரை நோட்டீசுகளில் அச்சிடும்படி உத்தரவு கொடுத்தேன். வடிவேலு நாயகரும் குதூஹலத்துடன் உடன்பட்டு அவ்வாறே அச்சிட்டார்.

மேற்சொன்ன நந்தனார் நாடகத்தில் முடிவில் சேலம் நகரவாசிகளில் இரண்டு மூன்று பெயர், எங்கள் சபையைப் பற்றிப் புகழ்ந்து பேசிவிட்டு இன்னும் இரண்டொரு நாடகங்கள் அங்கு ஆட வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். நான் அவர்களுக்குத் திரும்பி வந்தனம் அளித்தபொழுது அதைப்பற்றி யோசிக்கிறோம் என்று சொன்னேன். மறுநாள் காலை, எல்லா விஷயங்களிலும் யோசித்துப் பார்த்தபொழுது இங்கு நடந்த நான்கு நாடகங் களும் இரவு நாடகங்களானபடியால் ஆக்டர்களெல்லாம் மிகவும் களைப்புற்றிருக்கிறார்கள். ஆகவே ஆடமுடியா தென்று எங்கள் கமிட்டியாருக்குச் சொன்னேன்; ஆயினும் மற்ற ஆக்டர்களெல்லாம் இன்னொரு நாடகமாவது போட வேண்டுமென்று உத்தேசம் கொண்டனர். அதன் பேரில் எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு என்னிடம் வந்து அதற் கெப்படியாவது இசைய வேண்டுமென்று வற்புறுத்தினார். அதன் மீது திருஉளச்சீட்டுப் போட்டுப் பார்ப்போம். அதன்படி நடப்போம், என்று சொல்லி சமாதானம் செய்து, அங்ஙனமே செய்து பார்த்ததில், “வேண்டாம்” என்று வந்தது! அதன்பேரில் வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டது. பிறகு நாங்கள் மறுநாள் புறப்பட்டுக் கோயமுத்