பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/558

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

543





தூருக்குப் போக ரெயிலேறும் பொழுது, அந்த கலாட்டாவில் பலர் ஸ்டேஷனுக்கு வந்து எங்கள் வழியை மறித்து இன்னொரு நாடகம் போடுவதாகச் சொல்லிவிட்டு, போடாமல் போவது நியாயமா? என்று பகிரங்கமாகக் கேட்டனர்! அவர்களையெல்லாம் சமாதானப்படுத்துவது எனக்குப் பெருங்கஷ்டமாயிற்று! என்ன நியாயங்கள் கூறியும் அவர்கள் திருப்தியடையவில்லை; எங்கள் மீது குறை கூறி வருத்தத்துடனேதான் திரும்பிப் போயினர். அவர்கள் அவ்வளவு அன்போடு கேட்கிறார்களே, அவர்கள் வேண்டு கோளுக்கிசையாது போகிறோமேயென்று நான் மிக வருத்தப்பட்டேன். ஆயினும் ஆராய்ந்து ஒரு காரியத்தைத் தீர்மானித்த பிறகு, அதனின்றும் மாறலாகாது என்கிற என் கோட்பாட்டின்படி நடக்க வேண்டியதாயிற்று; அநேக ஊர்களுக்கு எங்கள் சபை போயிருந்தபொழுது அங்குள்ள பெரிய மனிதர்கள், இன்னும் இரண்டொரு நாடகம் போடலாகாதா என்று கேட்டிருக்கின்றனர்; ஆயினும் இந்த ஊர் ஒன்றில்தான் பேர் ஊர் தெரியாத பொதுஜனங்கள் இப்படி எங்களை வற்புறுத்தியது; ஆகவே எங்கள் ஆக்டர்களெல்லாம், சேலத்தை விட்டுப் புறப்பட்டபொழுது, பிரிய மனம் இன்றியே பிரிந்தோம் என்று கூறுவது அதிகமாகாது.

இவ்வூரிலுள்ள பெரிய மனிதர்கள், எங்கள் சபைக்கு ஒரு நாள் விருந்து நடத்தியதுடன் எங்களுக்கு வந்தனோபசாரப் பத்திரம் ஒன்றும் அளித்தனர். அது இன்னும் எங்கள் சபையில் தமிழ் ஒத்திகை அறையில் மாட்டப்பட்டிருக்கிறது.

சேலத்தை விட்டுக் கோயமுத்தூருக்குப் போனபோது, சேலத்தில் எல்லாம் மிகவும் சந்தோஷமாய் முடிந்ததே, இங்கு எப்படியிருக்குமோ என்னும் சந்தேகத்துடன்தான் போய்ச் சேர்ந்தோம். ஆயினும் இப் பயம் இங்கு எங்கள் முதல் நாடகமாகிய ‘லீலாவதி சுலோசனா’ ஆரம்பிப்பதற்கு ஒரு மணிக்கு முன்னதாகவே, அறவே நீங்கியது.

இந்த முதல் நாடகத்திற்கு முந்திய தினம் - வெள்ளிக்கிழமை என்று நினைக்கிறேன். என் வழக்கப்படி, எங்கள் ஆக்டர்களை யெல்லாம், கோயமுத்தூருக்கு அருகிலுள்ள மேலைச் சிதம்பரம் என்று சொல்லப்பட்ட பேரூர் என்னும் கிராமத்திற்கு ஸ்வாமி தரிசனத்திற்காக அழைத்துச் சென்றேன். அங்கு நான் ஓர் ஆபத்தினின்றும் ஈசன்