பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 நாடோடி இலக்கியம்

செத்துக்கிடக்கிற பாம்பைக் கண்டால்-சந்த மாமா, நான் சில்லாக் கோலால் குத்திப் போடுவேன்-சந்த மாமா! மூணு கோழிக்கு ஆறு காலு-சந்த மாமா

பெட்டைக் கோழி முட்டை யிடும்-சந்த மாமா

அத்தானே முன்னிட்டும், மாமனே. முன்னிட்டும் கிழவனே ஏசியும், கிழவியைப் பரிகசித்தும், மாப்பிள்ளை யைக் கேலி செய்தும் பாடும் பல பாடல்களிலே நகைச்

சுவை பல முறைகளிலே அமைந்திருக்கும், அவற்றைப் பிறகு பார்க்கலாம்.