பக்கம்:நாட்டியக்காரி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 திப்பது அனுபவத்தின்மீதே முகத்தைப் பார்த்தே யார் எந்தப்பிரிவு என்று கண்டு பிடிக்கும் திறமை அவனுக்கு உண்டு. ரயிலில் இருந்து இறங்கி வந்த ஒருவரிடம் ஓடி ஞன். ஐயா, காலணுக் கொடுங்க.......சாமி, புண்ணி யங்க........இன்று முழுதும் ஒண்னுஞ் சாப்பிடவே இல்லீங்க........ என்று செஞ்சிஞன். அப்பொழுது அவன் முகத்திலே ஓடிய உணர்ச் சிக்கோடுகள்........அவன் தொனியிலே ஒலித்த சோகம் .......அவன் தோற்றம்! அவனே அப்படிக் கண்ட யாருமே மனம் இரங் காமல் இருக்கமுடியாது. முட்டுக்குமேல், மிக அழுக் குப்படிந்த ஒரு கங்தைத் துணியைக் கட்டிக்கொண்டு, சடைபிடித்த தலேமுடியும், சிக்குப்பிடித்த தாடியும் முகத்தின் ஏழ்மைப் பிரதிபலிப்பின் பின்னணியாக விளங்க அலேயும் ஒருவன்! 'ஐயா, பிச்சை........காலணு' என்று கெஞ்சிக் கொண்டு ஒவ்வொரு சொல்லுக்கு ஒருதரம் பரிதாப மாகக் கும்பிட்டபடி வரும் அவனேக் கண்டு யாரும் மனமிரங்காமவிருக்க முடியாது. அவன் தொடர்ந்த ஆசாமியும் பையிலிருந்து கா ல ளு எடுத்துப்போட்டுவிட்டு முன் கடந்தார். அங்கே அவருக்காக கின்ற ஒருவர் சனியன்கள்! எங் கேபோனலும் இது பெரும் பிடையாய்ப்போச்சு: எழவு பிச்சைக்கார்கன் ஒழிக்க வழி ஒண்னுமில்லை யா? என முணுமுணுத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/34&oldid=782755" இலிருந்து மீள்விக்கப்பட்டது