இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9
9
அந்தக் காட்டின் ராஜாவாக ஒரு சிங்கம் இருந்தது. அது குருவி கூடுகட்டியிருந்த மரத்தின் அடியிலேயே வந்து நடுப்பகலில் தூங்கத் தொடங் கிற்று. தூங்கி எழுந்ததும் அது இடிமுழக்கம் போல கர்ஜனை செய்யும். நாள்தோறும் இப்படி அது செய்யவே குஞ்சுகளுக்குத் துக்கமே வரவில்லை. சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்டு அவை நடுங்கி அலறின. அதனுல் தாய்க்குருவி மிகுந்த கவலையடைந்தது.
ஒருநாள் அந்தக் குருவி சிங்கம் வந்துபடுக்கும் நேரத்தில் அதனிடம் பயந்து பயந்து மெதுவாகச்
நா-2