இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12
முயல்கள் கூறிக் கொண்டே ஓடின. அதைக் கண்டு முயல்களையும் முந்திக்கொண்டு மான்கள் ஒட ஆரம்பித்தன. அவற்றை ஒரு புலிக்கூட்டம் பார்த்தது. மா ன் க ள் "வருதே வருதே" என்று கூ ச் சலி ட் ட ன. அதைக்கேட்டுப் புலிகளும் "வருதே வருதே " என்று ஓலமிட்டுக் கொண்டு ஓட ஆரம்பித்தன.
யானைகள் கூட்டமாக ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தன. நடந்தது இன்னதென்று அறி யாமல், " நமது ராஜாவே ஓடிவருகிருர். என்னவோ வருகிறதாம், நாமும் ஒடத்தான் வேண்டும்” என்று கூறிக்கொண்டே யானைகளும் ஒடத் தொடங்கின. இப்படியாக இ ந் த விலங்குகளெல்லாம் காட்டை சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டு ஓடின. "வருதே வருதே " எனனும் கூச்சல் எங்கும் கேட்டது.