பக்கம்:நாட்டிய ராணி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


முயல்கள் கூறிக் கொண்டே ஓடின. அதைக் கண்டு முயல்களையும் முந்திக்கொண்டு மான்கள் ஒட ஆரம்பித்தன. அவற்றை ஒரு புலிக்கூட்டம் பார்த்தது. மா ன் க ள் "வருதே வருதே" என்று கூ ச் சலி ட் ட ன. அதைக்கேட்டுப் புலிகளும் "வருதே வருதே " என்று ஓலமிட்டுக் கொண்டு ஓட ஆரம்பித்தன.

 யானைகள் கூட்டமாக ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தன. நடந்தது இன்னதென்று அறி யாமல், " நமது ராஜாவே ஓடிவருகிருர். என்னவோ வருகிறதாம், நாமும் ஒடத்தான் வேண்டும்” என்று கூறிக்கொண்டே யானைகளும் ஒடத் தொடங்கின.
 இப்படியாக இ ந் த விலங்குகளெல்லாம் காட்டை சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டு ஓடின. "வருதே வருதே " எனனும் கூச்சல் எங்கும் கேட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டிய_ராணி.pdf/17&oldid=1295902" இலிருந்து மீள்விக்கப்பட்டது