இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20
"ஒஹோ நீ குரங் மாஸ்டரா ? சரி, உன் விருப்பப்படி ஆணையிடுகிறேன்” என்று சிங்கம் மகிழ்ச்சியோடு கூறிவிட்டு, தனது மந்திரி குள்ள நரியை அழைத்து, குரங்மாஸ்டர் சொல்லுவது போல எல்லோரும் நடக்கவேண்டும் என்று உத்தரவு இடுமாறு செய்தது.
அந்த நாள் முதற்கொண்டு புலி, யானை, மான், குள்ளநரிகள், குரங்குகள், ஒட்டகச் சிவிங்கிகள் இவற்றையெல்லாம் வைத்து வித்தை கள் தவறாமல் ஒத்திகை செய்யப்பட்டன. இந்தக் கூட்டத்திலிருந்த ஒரு நொண்டிக் குரங்குக்குத் தானும் குரங்மாஸ்டராக ஆகவேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. அதனால் அது சர்க்கஸ் குரங்கைப் பார் த் து, “பெரிய குரங்மாஸ்டரே உங்களுக்கு சலாம் செய்கிறேன். என்னையும் உங்க