இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4
4.
“ இந்தப் பக்கத்திலே ஒரு நரி சமயம் பார்த்துக் கொண்டே சுற்றிக்கொண்டிருக்கிறதாம். நான் சொல்வதைக் கேட்டு அதன்படி நட " என்று மறுபடியும் தாய் ஆடு வற்புறுத்தியது.
இருந்தாலும் நாட்டியராணி அறைக்குள்ளே போக மறுத்துவிட்டது.
நேரம் அதிகமாகவே தாய் ஆட்டை மேய்ப் பவர்கள் ஒட்டிக்கொண்டு போய்விட்டார்கள். தாய் கவலையோடு மேயச் சென்றது.
ஆடுமாடுகள் எல்லாம் சென்றுவிட்டன. பண்ணையிலே யாருமே இல்லை. பாதுகாவலுக்காக உள்ள நாய்களும் ஆடுமாடுகளோடு போய் விட்டன.
அந்தச்சமயம் பார்த்து ஒரு குள்ளநரி அங்கே வந்தது. ஆட்டுக்குட்டியைக் கண்டு அதற்கு ஒரே ஆனந்தம். " உன்னைக் கொன்று தின்னப்