பக்கம்:நான்கு நண்பர்கள்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சுண்டெலிக் கல்யாணம்

ஒரு முனிவர் கங்கை நதிக்குப் போனார். நன்ரறாகக் குளித்துவிட்டுக் கரைக்கு வந்தார்.

அப்போது ‘தொப்’பென்று ஒரு சுண்டெலி மேலே இருந்து விழுந்தது. அது ஒரு பெண் சுண்டெலி. உடனே, முனிவர் நிமிர்ந்து மேலே பார்த்தார். ஒரு பருந்து ஆகாயத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அதுதான் சுண்டெலியைத் தவறிக் கீழே போட்டுவிட்டது என்பதைத் தெரிந்து கொண்டார்.