பக்கம்:நான்கு நண்பர்கள்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆமை தப்பித்துக்கொண்டது. பக்கத்திலிருந்த - ஏரித் தண்ணீருக்குள் இறங்கி ஒளிந்துகொண்டது. எலியும் புதருக்குள் ஓடி ஒளிந்துகொண்டது.

ஏமாந்துபோன வேடன் ஆமையை வைத்த இடத்திற்கு வந்தான். அங்கே ஆமையைக் காணோம். அறுந்த கயிறும், வில்லும்தான் கிடந்தன. ‘ஐயோ, மானுக்கு ஆசைப்பட்டேன். கையில் இருந்த ஆமையும் போய்விட்டதே’ என்று வருந்தினான்.

மறுபடியும் நான்கு நண்பர்களும் ஒன்றாய்க் கூடினார்கள்.

“புத்தி இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம்” என்றது காக்கை.

“ஒற்றுமையே பலம்” என்றது எலி.

“ஆமாம், ஆமாம்” என்று தலையை ஆட்டின ஆமையும், மானும்.