நான்மணிக்கடிகை
33
நான்மணிக்கடிகை 33
ஊனுண் டுழுவை நிறம்பெறூஉம் நீர்நிலத்துப் புல்லினான் இன்புறூ உங் காலேயம் - நெல்லின் அரிசியான் இன்புறூஉங் கீழெல்லாந் தத்தம்
வரிசையான் இன்புறூஉ மேல்.
(66)
பின்னவாம் பின்னதிர்க்குஞ் செய்வினை என்பெறினும் முன்னவா முன்னம் அறிந்தார்கட்கு - என்றும் அவாவா மடைந்தார்கட் குள்ளந் தவாவாம்
அவாவிலார் செய்யும் வினை.
(67)
கைத்தில்லார் நல்லர் கைத்துண்டாய்க் காப்பாரின் வைத்தாரின் நல்லர் வறியவர் - பைத்தெழுந்து வைதாரின் நல்லர் பொறுப்பவர் செய்தாரின்
நல்லர் சிதையா தவர்.
(68)
மகனுரைக்கும் தந்தை நலத்தை ஒருவன் முகனுரைக்கும் உண்ணின்ற வேட்கை - அகனிர்ப் புலத்தியல்பு புக்கா னுரைக்கும் நிலத்தியல்பு
வான முரைத்து விடும்.
(69)
பதிநன்று பல்லா ருறையின் ஒருவன் மதிநன்று மாசறக் கற்பி - னுதிமருப்பின் . ஏற்றான்வி றெய்தும் இனநிரை தான் கொடுக்குஞ்
சோற்றான்வீ றெய்துங் குடி,
(70)